Friday, January 2, 2009

புலிகள் எதற்குப் பின்னே

இன்றையதினம்
படித்ததில் கிடைத்தவை இவை

புலிகள் எதற்குப் பின்னே
நடந்தார்கள்..?

இராவணன் தோல்விக்கு
விபீஷணன் காட்டிக் கொடுத்தான்..

கட்டபொம்மன் தோல்விக்குக்
எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்..

பண்டார வன்னியனுக்கு அவன்சாதி
காக்கை வன்னியன் குழிபறித்தான்..

சங்கிலினுக்கு இன்னொரு காக்கை
என்கிறது கண்டவர் சரித்திரம்..
ஊமைத்துரை என்பதே
கேள்விப்பட்ட பெயர்..

சிவன்பூமி இலங்கையின்
செறிந்த வரலாற்றில்
இன்னொரு பக்கம்..இது..
தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை
மூத்தசிவன்..

மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய
தீசன் மகன் கோத்தபாயா

கோத்தபாயா மகன் துட்டகைமுனு..
சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்..

இன்றுவந்த இராசபக்ச கதையிது..
கலிங்கமன்னனை வீழ்த்தி
யாழ்ப்பாணம், வன்னி, பொலநறுவையைக்
கைப்பற்றிய சிங்கள மன்னர்போல்
கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னாள் புலியொருவன்
வழிசொன்னான் என்கிறது இன்றைய
கொழும்புச் செய்திகள்..

இதைப் புலத்து வானொலிகள் இன்று
பலமாய் உரைத்தன..

இன்றைய தமிழர் போராட்டத்தில் பிறந்த
இரண்டு ஒட்டுக்குழுக் காக்கைகள்..

அந்நியப் படையை நம்பி இருக்கும்
ஆலகால விஷங்கள்..

யாழும் கிழக்கும் கப்பம் கொலை, கற்பழிப்பு என்று
பாழும் இயமன்களால் பதம் பார்க்கப்படுகிறது..

இன்றைய வீழ்ச்சியில் இவர்கள்
பழிகாரர்களாக..

எட்டப்பனால் உருளும் இனத்தை
அந்நியன் சரித்திரம் இனியும் எழுதுமா?

புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..
இது தோல்வியா? திருப்புமுனையா..?

இரண்டும் புலிகள் கையில்..

-சுந்தரபாண்டியன்...

3 comments:

  1. tharmathin vaalvu thannai soodhu kavvum
    tharmam marbadi vellum.......

    Meendum puligal eluchi peruvargal

    ReplyDelete
  2. எனக்கு தெரிந்து பின்வாங்கி அடி கொடுப்பார்கள் புலிகள்

    ReplyDelete