Tuesday, January 13, 2009

தமிழே இசையைத் தான்தாங்கு!

தமிழே இசையைத் தான்தாங்கு!

எடுப்பு
தங்கத் தமிழே எனைத்தாங்கு-நீ
தானே இசையின் உயிர்ப்பாங்கு -தங்கத்

தொடுப்பு

முங்கிப் பொழியும் மொழியின் வெள்ளம்-நீ
முத்துப் புலவர் ஏந்தும் உள்ளம் -தங்கத்

முடிப்பு

எங்கும் ஏற்றும் ஒளியின் சிதறல்-தமிழ்
இசைகள் கோர்த்த மணியின் கதிர்கள்
பொங்கு தமிழிற் பூக்கும் அருவி-இசைப்
புயலாய் மருவும் தென்றற் புரவி -தங்கத்

ஆசைக் கருக்கள் தேசக் குயில்கள்-பண்
ஆகிக் களித்து ஆடும் மயில்கள்
ஈசன் பாதம் இசையின் கீதம்-இந்த
இரண்டும் இணைக்கும் மொழியின் நாதம் -தங்கத்

புதியபாரதி.
(இசை ஏற்றபவர்கள் எழுதியவரையும் குறியுங்கள்)

1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


    தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

    கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
    சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


    உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
    உழவன்

    ReplyDelete