Friday, January 2, 2009

கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா?

கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா?


நிலவரம்


'வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவத்தினரை மீளத் திரும்பிச் செல்ல விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் தமிழ் மக்கள் போராடி வருவதாக' தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தக் கூறப்பட்ட வார்த்தையே அதுவென நினைத்திருந்த பலர் தற்போது வன்னிக் களமுனைகளில் இருந்து வருகின்ற சேதிகளை வைத்து அந்த வார்த்தைகள் யதார்த்தமானவையே என நம்பத் தொடங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தாம் தந்திரோபாய ரீதியாக இடங்களை விட்டுப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் எனக் கூறிய போது பரிகாசம் செய்த சிங்கள இராணுவத் தலைமை தற்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து நிற்கின்றது.

கடந்த 16 ஆம் திகதி முதல் கிளிநொச்சி மற்றும் கிளாலி கள முனைகளில் நடைபெறும் மோதல்களில் இரண்டு நாட்களில் 170 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சுமார் 50 வரையான சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டும் உள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களின் எண்ணிக்கை தனி.

கிளாலிச் சமரை விட கிளிநொச்சி மாவட்ட எல்லைக் கிராமங்களான புலிக்குளம்இ குஞ்சுப்பரந்தன்இ மலையாளபுரம்இ முறிகண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற சமர்களிலேயே படையினருக்கும் பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கே 130 வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டு 300 பேர் வரையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இதேவேளைஇ 22 ஆம் திகதி இரைணமடுஇ உருத்திரபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மோதல்களில் 100 இராணுவத்தினர் வரை கொல்லப்பட்டும்இ 250 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது தவிரஇ படையினர் கைப்பற்றியிருந்த சுமார் 2 கிலோமீற்றர் நீளமான பிரதேசமும் கூட மீட்கப் பட்டன.

வழக்கம் போன்று தமது இழப்புக்களை மறைப்பதற்கு சிங்களப் படைத்துறைத் தலைமை பகீரதப் பிரயத்தனம் செய்த போதிலும் அதனையும் மீறி செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து விட்டன. யுத்த வெற்றி தொடர்பான சிங்கள மக்களின் மாயை இதனையடுத்து படிப்படியாக விலகத் தொடங்கியிருக்கும் என நம்பலாம்.

டிசம்பர் 10; ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று புதுமுறிப்பு மற்றும் அறிவியல்நகர் பகுதிகளில் இருமுனைகளில் படையினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் நடாத்திய பதில் தாக்குதலில் 120 பேர் பலியானதுடன் 200 பேர் வரையான இராணுவத்தினர் காயமடைந்தும் இருந்தனர். இராணுவத்தினரின் 12 உடலங்களும் கூட கைப்பற்றப் பட்டிருந்தன.

இதனையடுத்து கிழக்கில் இருந்து மேலதிகமாக 500 துருப்பினர் அவசர அவசரமாக வன்னிக் களமுனைக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். ஆனால்இ அண்மைய சமர்களில் இதைவிட அதிகமானோர் களமுனையில் இருந்து அகற்றப் பட்டிருக்கின்றனர்.

புலிகள் தற்போது தான் தமது எதிர்த் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதுவும் முழுமையாக இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதற்கே இப்படி என்றால்? இனிவரும் நாட்களைக் கற்பனை பண்ணக் கூட சிங்களப் படைத்துறைத் தலைமை விரும்பாது.

இதேவேளைஇ நாளாந்தம் போர்முனையில் காயப்படும் படையினரை வைத்தியசாலைகளில் பராமரிப்பதில் சிங்கள தேசம் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது அநுராதபுர வைத்தியசாலையில் 700 வரையான படையினரும் கொழும்பில் உள்ள படையினருக்கான மருத்துவமனையில் சுமார் 700 பேர் வரையானோரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவை தவிர கொழும்பு தேசிய வைத்தியசாலைஇ ஜெயவர்த்தனபுரஇ ராகம மற்றும் கழுபோவில வைத்தியசாலைகளில் 565 பேரும் உள்ளனர். ஆக மொத்தம் சுமார் 2000 பேர் வரை உள்ளனர். இத்தொகை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

இதுதவிர வவுனியாஇ பலலி தள்ளாடி இராணுவமுகாம் மன்னார் வைத்தியசாலை என பல இடங்களிலும் காயமடைந்த படையினர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்தையும் கூட்டிப் பார்த்தால் சுமார் 5000 படையினராவது கடுமையான காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என ஊகிக்கலாம். அரசாங்கம் கூறுவது போன்று யுத்தத்தில் வெற்றி பெற்று வரும் நிலையிலேயே இவ்வளவு சேதங்கள் என்றால் யுத்தத்தில் தோல்வியடையப் போகும் அடுத்த கட்டத்தில் என்னவாகும் என்பதை ஊகிக்க முடிகின்றது.

இத்தகைய பின்னணியில் திரு. நடேசன் அவர்களின் கருத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தால் பல விடயங்கள் புரியும்!

info.tamil.com

No comments:

Post a Comment