Wednesday, January 14, 2009

துன்பப் பொங்கல்

துன்பப் பொங்கல்
துடைக்கும் இன்னல்!


பச்சரிசி தானும் இல்லைப்
பழம்பாக்கு வெற்றி லைகள்
அச்சுவெல்லம் ஏதும் இல்லை
அடுப்புவைக்கப் பானை இல்லை
குச்சிலொரு சேலை கட்டி
குடியிருக்கும் மக்கள் எல்லாம்
அச்சமில்லை என்று ரைக்க
அன்னைநிலம் பொங்கு தடா!

வார்த்தைகள் இல்லை மக்கள்
வதைபடும் தொல்லை எண்ணம்
சேர்த்தொரு நீதி சொல்ல
செகத்தொரு மனிதம் இல்லை
ஊர்த்திடல் வரித்த வேள்வி
எழுதிடும் வெற்றிப் பொங்கல்
ஆர்த்திடும் புதிய ஆண்டு
அகிலமெல் லாமும் காண்போம்!

No comments:

Post a Comment