Saturday, January 17, 2009

சிலுவை சுமக்கும்

சிலுவை சுமக்கும் திருமாவளவா?


தொல்.திருமாவளவா..?

ஈழத்தமிழன் துயரத்திற்காகச்
சிலுவை சுமக்கும் தேச மைந்தனே..!

அறப்போரின் புதிய அத்தியாயம் ஒன்று
இப்பொழுது அரங்கேறுகிறது..

உலகத் தமிழனின் கண்களில் நீ
அலகாய் நிற்கிறாய்..

இந்தியா என்ன நிமிர்த்தக் கூடிய
நாய்வாலா..?

கண்டி மலைநாட்டுத் தேனீர் குடித்தபடி
தமிழ்நாட்டு மண்ணைத் தாரைவார்த்த
இந்திராவின் தவறு
இப்பொழுதும் தெரியவில்லையா?

அதுவொரு இயம விளையாட்டென்று..

அறுநூறு தமிழன் உயிர்கள்
அடித்துப் பறித்தபின்பும்
பாக்குக் கடலில் சீக்குத் துடைக்கிறது..
இந்தப் ப(h)ரதம்

பாரதத்தின் பாதுகாப்பு கேரளத்தார் கையில்
பழுது பார்க்கப்படும் இந்த வேளை..
பாகிஸ்தான் மும்பையில் பகிடிவிடுகிறது..

சிங்களக் கூட்டம் நாராயணனை
நடக்கவிட்டுப் பார்க்கிறது..

தமிழன் தலையில் மகிந்தன்
குண்டு அரைக்கிறான்..

கொஞ்சம் திரும்பிப்பார்..
பிடரியில் அடிகொடுத்த பின்பும்
புரியாத ரசீவுகாந்தி
தெரியாத ஒப்பந்தம் எழுதித்
தீர்ந்து போனார்..

இயமம்படையை அனுப்பி
அமைதிப்படை என்று
அறிவித்தவர் அறியாமலேயே போய்விட்டார்..

யார் கொன்றிருப்பார்கள்..?

சூனாச் சாமியும், சானாச் சாமியும்
சோனியாவின் கருத்துக்குச்
சொல்லப்பட்டிருக்கிறார்கள்..

சோனியா அம்மாவையும்
முன்னர் விசாரிக்கச் சொன்னவரும்
இந்தச் சூனாச் சாமி..!

திலீபனுக்குப் தீகொடுத்தவர்கள்..
பூபதித் தாயின் இறப்பிற்கு
மூப்புப் பார்த்தவர்கள்..

பன்னிரு வேங்கைக்குச்
சயனைட் கடிக்கச் செய்தவர்கள்..

அரிசியும் பருப்பும் போட்டு
ஆறு இயக்கங்களை அடிபட வைத்தவர்கள்..

கற்பழித்துப் போனவர்கள்-
பொற்பதக்கங்களைத் தட்டிப் பறித்துச்
சாக்கில் போட்டு
பாக்குநீரிணை கடந்தவர்கள்..

குறையாக ஒப்பந்தம் எழுதி
கறையாக முடித்த இந்தியம்
பொய்யான வலிமைக்குள்
பொல்லு வைத்திருக்கும் ஒரு பூ(க்)கம்பம்..

சிங்களத்தைத் தெரியாமல்
தமிழனுக்கு ஒத்தடம் கொடுக்கப்போன
தம்பிரான்கள்..

நீ.. தெரிந்துகொள்..

மந்தியிலும் பார்க்கப் பாய்கிறார்கள்
இந்த இந்திய மாய்மாலம்..

உன்வரலாறு சிலுவை சுமந்த வரலாறு..

பொன்னாற் பூக்கிறது ஈழப் பூக்கள்..

உன்னால் நிமிர்ந்தது
அறத்தின் பூக்கள்..

உன்மூச்சில் மலர்கிறது
அக்கினிப் பூக்கள்..

உலகத் தமிழன் கண்கள் இன்று
உன்னாற் திறக்கப்பட்டிருக்கிறது..

கேட்டு ஒன்றும் நடக்காது திருமாவளவா..

அதனாற் தானே நீ தமிழகத்தின்
பூட்டை உடைத்திருக்கிறாய்..

காட்டுநரியும் கோட்டை நரியும்
கூட்டுச் சேர்ந்தால் என்ன?

தமிழீழ நாட்டுத் தர்மம்
ஒன்றே வெல்லும்..
இன்றே வெல்லும்..
என்றும் வெல்லும்..!

நீ.. நிமிர்ந்து கொண்டாய்..
தமிழீழம் எழுந்து கொண்டது..

வாழ்நாளின் சாதனையாளா..
உன்னை
வணங்குகிறது தமிழீழம்..!

-வன்னிமைந்தன்..

No comments:

Post a Comment