Monday, January 5, 2009

பழியாய் இந்தியம்!

பழியாய் இந்தியம்!

சிவராமைக் கொலைசெய்யப் பயன்பட்ட
வாகனம் சித்தார்த்தனுகு உரியது..

ஆனால்..
சிவராமின் கொலைஞனை
சித்தார்த்தனுக்குத் தெரியாது..

சிலநேரம் சிலதுகள்
காதில் பூக்கள்..?

சிவராமின் பல இலட்சப் பெறுமதியான
தொலைபேசியை வைத்திருந்தவனைக்
கொலைகாரன் என்றது காவற்துறை..

சிறையில் வைத்துப்
பிணையைக் கொடுத்து
கறையைத் துடைத்தது காட்டாட்சி..

அவனை இப்பொழுது
காணவில்லை என்கிறது
கடுதாசிச் சட்டம்..

சிலநேரம் சிலதுகள்
நீதிப் புழுக்கள்..!

இன்றைய இலங்கப் போரில்
மலமாய் இருக்கும் இந்தியத்திடலே
சிவராமின் கொலைக்கும்
சித்தாந்தம் கொடுத்தது என்பது
சில தளங்களில் வந்து போனது..

எல்லா தமிழர் மாமனிதர்
கொலைகளுக்குப் பின்னாலும்
இந்தியக் கிடங்கு..

சமநேரத்தில்..
புலிகளின் போரைப் பார்த்துத்
தானும் தெளிந்து கொள்ள
சிவில் உடையில்
இந்தியக் கடற்படை
வன்னிக்கு வந்திருப்பதாக
தமிழகச் செய்திகள்...

தோற்றோடிய அமைதிப் படை
இப்பொழுதுதான் தேர்வு எழுதுகிறது..

தமிழன் சொத்தான கச்சதீவை
தமிழர்களின் கொலைக்காக
சிங்களத்திற்குக் கொடுக்கப்பட்டதாக
இன்றைய நாட்கள் எழுதப்படுவதற்கு
எதிர்காலம் தெரியாதிருந்த ஒரு
அரசியல் வாதியாக இந்திரா அம்மை
இன்று எழுதப்படுகிறார்..

இவருக்காக-இவரின்
மரண ஊர்வலத்திற்காக
தமிழீழம் முழுவதும்
வாழைகள் தோரணங்கள் கட்டி
கண்ணீர் சிந்தியவர் நாம்.. என்பது
இந்தியம் விளங்கப் போவது இல்லை..

ரசீவ் கொலையாளி கொழும்பில் இருந்தோ
அல்லது அமெரிக்காவில் இருந்தா
அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு
ஆராய்கின்றன தமிழகப் பத்திரிகைகள்..

ரசீவைக் கொலைசெய்தது யார்?

சோனியாவுக்கு இப்பொழுது
விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது..

சு.சுவாமியும் ச.சுவாமியும்
குறுக்கு விசாரணைகளில் வந்துபோன
இரண்டு ஆசாமிகள்..

ஆனால் இன்னும் புலிகளைச் சொல்லியே
அரசியல் நடத்துகின்றன
அடிமைச் சாமிகள்..!

கொலைஞரைக் கைக்குள் வைத்துக்கொண்டு
வலையிலே அப்பாவிகளைப் பிடித்திருக்கிறது..
இந்திய ஆலவட்டங்கள்..

விடுதலைக்கு நேரம்வந்தும்
கிடுக்கிப் பிடியில் சிறையின் மடியில்
எத்தனை சித்திரங்கள்..

இந்தியத்தின் உண்மையான எதிரி யார்?

இலங்கமா? தமிழீழமா?

தமிழீழம் தமிழகத்தின் சொத்து!

இலங்கம் சீனாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் சொந்தமானது..

இந்தியம் தெரிந்து கொள்ளாதவரை
சரிந்து விழுவதைத் தவிர
வேறு வழியில்லை..

-சுந்தரபாண்டியன்..

No comments:

Post a Comment