Saturday, January 3, 2009

நம்பிக்கை

நம்பிக்கை..!
நிலம் விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது..
பலம் இழக்கப்பட்டதா?

காட்டிக் கொடுப்பவன் ஒருவனாலேயே
இராணுவம் காலை நீட்டிக் கொண்டிருப்பதாக
இராசபக்ச நன்றி உரையில்
நாக்கைக் காட்டினார்..

உலக வானொலி தமிழில் இந்தச்செய்தி
எடுத்துவரப் பட்டது..

கருணாவைப் தாமே பிரித்தவர் என்றும்..
அதனாலேயே இந்த வெற்றி என்று
அளந்திருக்கிறது
ஐக்கிய தேசியக் கட்சி..!

கிளிநொச்சியில் சிங்கக்கொடி
ஏற்றப்பட்ட காட்சிகள்
ரூபவாகினியில் வந்த அதேநேரம்..
தமிழனைக் கேவலப்படுத்தும்
கோலங்களும் கூடவே
கொடுக்கப்பட்டன..

உலகம் முழுவதும் இடிபட்டிருக்கிற
தமிழினத்தை நோக்கி..
அடிபட்டுப் போக வேண்டாமென
அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது..

ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று
எடுத்துவந்த புலிகளுக்கு
நான்காவது எம்மாத்திரம் என்கிறது
நாடறிந்த ஆய்வுக்களம்..

பிணத்தைக் கற்பழித்த பேய்ப்படை
கணத்தில் உலகமெலாம் பரவிய
காட்சியைக் கண்டோம்..

பார்க்காதவர்கள் தளங்களில் பாருங்கள்...

புலிப்பெண்ணாள் ஒருத்தியின்
நிர்வாணச் சடலத்தின்மீது
அம்மட்ட.. என்று
பச்சைத் தூசனத்தில் பாட்டுப்பாடுகிறான்
அந்தப் படைஞன்..

இன்னும்..
காட்டிக் கொடுப்பவர்களால்
கூட்டிக் கொடுப்பதைக்
காலம் எழுதுகிறது..

ஓட்டி ஓட்டி இழுத்துச்செல்கிறது
ஓடிவரும் வெள்ளை வாகனம்..

கடந்த ஒருகிழமையில் மட்டும்
பதினாறு தமிழர் இறக்க, ஐம்பது வரையானர்கள்
வான்தாக்குதலில் காயப்பட்டார்கள்..

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்
புலிப்படை என்று புத்தகம் எழுதாதீர்கள்..

தங்கள் கையில்
தமிழன் எடுத்த
நம்பிக்கைப்போர்..இது..

உங்கள் நம்பிக்கை இழக்காதிருக்கும்வரை
நாடு எழுந்துகொண்டே இருக்கும்..!

நம்புவோம்.
காலம் பதில் சொல்லும்..
-சுந்தரபாண்டியன்.

No comments:

Post a Comment