Thursday, January 15, 2009

மண்ணில் விளைந்தவை-01..!

வேங்கை வருகவே..!

புலிகள் ஓங்குமா?-மண்ணின்
புகலைத் தாங்குமா?
எலிகள் வீங்குமா- தமிழர்
இனத்தை அழிக்குமா?

இன்னும் ஏனடா-இந்த
இழப்புத் தானடா?
அன்னைப் புதல்வனே-நீ
அதிரும் திசையடா!

கண்ணை மூடியே-சிங்கக்
கரிச்சான் கொல்லுறான்
விண்ணில் வந்துமே-குண்டு
விசுக்கிப் செல்கிறான்!

சும்மா திரிந்தவர்-அன்னை
தேசம் மறந்தவர்
எம்மாக் கதைக்கிறார்-அட
இடியாய்ச் சிதைக்கிறார்!

சதையே நொருங்குதே-சொந்தம்
சாய்ந்து கிடக்குதே
பகைவன் சிரிக்கிறான்-ஒட்டுப்
பழியன் நகைக்கிறான்!

தூங்கிக் கிடந்தவர்-காசு
துளியும் இழந்திலர்
ஏங்கிக் கதையிட-அட
இப்போ வருகிறார்!

வேங்கை மறவரே-உம்
வீரம் எழுகவே
நாங்கள் இருக்கிறோம்-எங்கள்
நாடு எழுதவே!

இளையோர் கரங்களே-புவி
எங்கும் உயர்கவே
மழையாய் வழங்குவீர்-தமிழ்
மண்ணின் புதல்வரே!


-வன்னிமைந்தன்

No comments:

Post a Comment