Thursday, January 22, 2009

எரியும் பொழுதுகள்..

வெண்பனிப் பரப்பிலே மேபிள் மரங்களாய்
என்மனம் காட்டிடும் நிர்வாணம்..வெள்ளை -வெண்பனிப்

துண்டிலா நிழல்கள் தூரனின் கிறுக்கலாய்த்
தெரிந்திட என்மனம் தினம்வாடும்..வெள்ளை -வெண்பனிப்

உண்ணவோர் பருக்கைகள் உதவுவார் இல்லை
உடுக்கவோர் புடவைகள் இடையிலும் இல்லை
மண்ணிலே என்குலம் மடிந்திடும் தொல்லை
மானமண் அழிவதோ வாழ்க்கையின் எல்லை.. -வெண்பனிப்

குண்டுகள் தலைக்குமேல் கொட்டுதே அம்மா
கொடியவர் வதைக்குகை முட்டுதே அம்மா
தெண்டிரை எழினித் தேசத்தின் வாசலில்
தீந்தமிழ் ஒலிக்கத் திரும்புமோ விடியல்.. -வெண்பனிப்

-நம்நாடன்

No comments:

Post a Comment