Saturday, September 26, 2009

திலீபா..



(திலீபன் நினைவுநாள் சிந்தனை)

நேற்று உன் நினைவோடு மீண்டும்
கருக்கள் கட்டின..

அந்த
ஆற்றின் முளையோரம் உன் ஆவி
அசைந்து கொண்டது..

பார்த்துத்தான் கதைத்தேன்.. நீசேர்த்த
ஊர்த்திவலை எல்லாம் உவங்கள்தான்..

படலைக்குப் படலை எல்லாம்
சுடலை ஆச்சுதடா..!

இராசபக்சா இந்த நூற்றாண்டின்
இராட்சதன் ஆகினான்..

மானம் ஒருகையில்
மகிழ்ச்சி மறுகையில்
தானம் கொடுத்த தமிழ்வாழ்வு..
ஈனரின் கையில்
இறைச்சி ஆனதடா..!

சத்திய வேட்கைக் குஞ்சுகள் எல்லாம்
சருகாய் எரிந்தன..

விடலைத் தமிழிச்சிக் குடலை எடுத்தான்
கோத்தபாயா..

வெள்ளைக் கொடியொன்றும்
விசரனுக்குத் தெரியவில்லை..

முள்ளிவாய்க் காலெல்லாம்
முழுமணலும் எரிந்ததடா..!

முட்கிடங்குக் குள்ளே ..
மூன்று இலட்சம் மக்கள்...

மழைநீரும் மலமும்..
மகிந்தா கொடுத்தான் காண்..!

நீ எரிந்த பின்னாலும்
இந்திநிலம் விடவில்லை..

சோனியளாய் வந்தீழக்
கூனியளாய் ஆனதினால்
பேத்தை மகிந்தனுக்கு
ஊத்தை மலிந்ததுபார்..!

சாத்திடலாய் நாளெல்லாம்
சவக்கிடங்கு போடுதடா..!

உன்னை நினைந்து
கங்கை விழியருவிக்
கண்ணை உடைத்தோராய்ச்
சென்னி எல்லாம்
சிறந்தோக்கக் கண்டேன் யான்..!

மூசு பனிக்குள்ளும்
காசு சேர்த்தவர்கள்
பேசும் தலைவனுக்குப்
பின்புலமாய் நின்றார்கள்..

இன்றும் அப்படித்தான்..
இளைஞன் கையில்
எங்கள் இனம் இருக்குதடா..

சுட்டுவிரலில்; சூரியன்கீழ்
இருந்தோம் நாம்..

இன்று..
கட்டுக் குலைந்த
காட்சியும் தெரிகிறது..

வன்னி செயல்கொடுத்த
வாய்க்காலில் மீன்பிடித்து
தன்னை வளர்த்தவர்கள்-
தலைவன் விசாரணைக்குள்
அலைக்கப் பறந்தவரும்
இன்று வருகின்றார்..

விசாரணைகள் பின்னாலே
விலத்திப் போனவரும்
உலவி வருகின்றார்..

கேபி கொடுத்தவரம்
கேளென்று ஒவ்வொருத்தர்
சூப்பி பிடித்துச் செருக வருகின்றார்..

குளிர்தெரியாக் கனவான்கள்
பலர் வந்து போகின்றார்..

இயக்கம் எனநுழைந்து
பலஇலட்சம் பார்த்தவரும்
மயக்கம் தெளிந்து
மறுபடியும் வருகின்றார்..

கடைவைத்த காசைக்
கணக்கெடுத்த பின்னாலும்
குடைவைத்துக் கொண்டு
கோமான்கள் வருகின்றார்..

என்றாலும் நாங்கள்
இயக்கத்தைப் பார்த்தவர்கள்..

இயக்கம் வளர்த்த
வணிகப் புரவலர்கள்
செயலிற்றான் இன்னும்
செந்தமிழன் இருக்கின்றான்..

குளிருக்கும் பனிக்கும்
குலைநடுக்கத் துள்ளேயும்..
வளர்த்த இயக்கத்தை
வந்தவழி விடமாட்டோம்..

உண்ணா விரதம் இருக்கின்றார்
இளைஞரெலாம்..

உன்னை நினைந்து
கண்ணில் நீர்பெருக்கி
நீ வளர்த்த மண்ணை
நினைந்து தவமுருகி
நிலத்தில் பிறவாமல்
புலத்தில் பிறந்தவர்கள்..
குலமாய் மலர்ந்து
கூடாரமாய் நின்றார்..

மறுபக்கம்...
பகைவர்கள் எல்லாம்
பதாகையொடு வருகின்றார்..

விட்டில்கள் போலே
விழுந்த நிலத்தின்மேல்
கட்டில்கள் போடக்
கனபேர் வருகின்றார்..

சுட்டுவிரலில் சூரியன்கை நின்று
கட்டுப்பட்ட காலம்போய்..
கனக்கக் கதைக்கின்றார்..

மேதையென்றும் பட்டம் என்றும்
மேல்விலாசம் காட்டுதற்கு
வேலுப்பிள்ளை மைந்தனுக்கு
வில்லங்கம் போடுகின்றார்..

நாங்கள் இருந்தநிலம்
நாங்கள் எரிந்தநிலம்..
தாங்கி இருப்பெடுக்கத்
தப்பர்கள் தேவையில்லை..

இயக்கம் அதுவின்னும்
இருக்கிறது..
தலைவன் ஒருநாள்
தலைசிலிர்த்து வருவான் பார்..!

என்றாலும் எங்களுக்குள்
இருப்பெடுக்க வருகின்ற
ஒன்றும் வேண்டாம்..

நீ கனவிற் சொல்லிவை..

'தென்னைபனை தெரியாமல்..
திருத்தலைவன் பாராமல்..
இன்னும் பிறக்கின்ற
எங்கள் பரம்பரைகள்
வேரூன்றி விதைக்கின்ற
வேள்விகளைச் சிதையாதீர்..'

என்றே பகர்வாய்..
இருந்தவிடம் தோண்டிப்
பிரிந்தவர்கள் எல்லோரும்
மறந்தும் வரவேண்டாம்..

உருத்திர குமாரனும்..
உலகத் தமிழினமும்
ஒன்றுபட்டாலே
இருக்கிறது வெற்றியென்பேன்..

சென்றுவா.. திலீபா..
செகமெல்லாம் ஒன்றாக..
உன்நினைவு கொண்டு
உருக்கொடுக்கச் செய்துவிடு..

உயிர் உருக்கும் விரதத்தை
ஊருலகம் படைத்தவனே..
பயிர் விளைக்கும் விடியலிலே
பாதை வகுத்துவிடு..
-புதியபாரதி

Friday, September 25, 2009

ஈரமண்ணின் இதயச் சிறகுகள்!



(கலிவெண்பா)

கதவம் திறக்கமுன் கார்மண்ணில் எங்கள்
பதறும் நிலைகாட்டும் பார்வை இதுபாரீர்!
மாற்றான் வலிக்காடு வந்துற்ற வேளையிலும்
கூற்றாய் அவன்விரித்த கொட்டும் விசக்கோடு
ஊற்றுநிலம் மீதேறி ஊறணிகள் தேன்சுவடுக்
காற்றுத் திசையெங்கும் காமாறி யாய்வந்தும்,
போற்றும் தலைவன் புறமுதுகு காட்டாமல்
நேற்று அவன்வாயில் நின்றென்ன சொன்னானோ
கீற்றும் பிசகானாய்க் கேளங்கே நின்றான்காண்!
மக்களுக் கென்ன வாதையோ தான்பெற்ற
மக்களுக்கும் என்றே மறப்போரைக் கண்டானே!
வீராதி வீரன் விடிவுப் பெருவெள்ளி
போராடும் தீரன், பிரியமகன் சாள்ஸ்சைத்தன்
நேரோடு போர்க்களத்தில் நெஞ்சுரத்தைக் கண்டானே!
சீரோடு போர்த்தமகள் துர்க்காப் பசுங்கிளியைப்
போராடு என்றே புலிமகளாய் ஆக்கியவன்!
மக்கள் உடைத்தான வாதையிலே தான்மட்டும்
திக்கில் பறக்கத் திருத்தலைவன் எண்ணாணாய்
முள்ளிவாய்க் காலென்றும் முல்லை நகரென்றும்
பிள்ளைப் பிரபா பிரிய நிலப்போரில்
வெந்து மணற்காடு வீறிட்டுத் தீயாகும்
நந்திக் கடலெங்கும் நாயகனாய் நின்றான்காண்!
பல்லாயி ரத்தோராய்ப் பாடம் எடுத்துவந்த
சொல்லாரும் வல்புலிகள் தேசார் தளபதிகள்
எல்லோரும் நின்றே ஏறுபோர் கண்டானே!
கல்லு வெடிப்பதுபோல் காடுறையும் வாய்க்காலும்
இந்தியம் வந்து இனவழிப்புக் கூற்றுவனைச்
சொந்தம் எனத்தழுவிச் சேரீழம் நின்றதினால்
நச்சு வெடிப்புகைகள் நாச விசக்குண்டுக்
கச்சைகள் சேர்த்துக் கயவனொடு கூடியதால்
வேழாதி வேழம் விறல்மறவர் போராடும்
ஈழம் எனவொருத்தர் இல்லை எனச்செருகக்
கூழாய் எடுத்துவந்த கூத்தாடி இந்தியத்துள்
பாழாகி என்தமிழர் பல்லாயி ரம்செத்தார்!
தேசப் பிரபா செருக்களத்தில் ஆடுகளம்
வீசி எறிந்தானா? வெங்களத்தில் ஊடறுத்துக்
கால மணிச்சுவடு கண்டறியப் பார்த்தானாய்க்
கோல முகவடிவன் கொண்டுகளம் வருவானா?
ஏதும் அறியாராய் இன்றுலகக் காண்தமிழன்
வாதும் வருத்தமுமாய் வண்ணமுகம் தேடுகிறார்!
சூதின் அரசாங்கம் சொல்லரிய துன்பத்தைப்
பேதியாய் ஊற்றும் பெருங்கொடுமை தன்னில்
அறுபதுகள் தொட்டு இனவழிப்புச் செய்யும்
உறுவதைகள் எல்லாமும் இன்னும் நெடுக்கிறதே!
முட்கம்பிக் குள்ளே முழுநீர் மலங்களுமாய்
உட்கிடத்தி எங்கள் இனத்தை அழிக்கின்றான்!
புதுவை, கரிகாலன், பாலகுமார், யோகி
நதிபோல வாய்த்த நறுந்தமிழர் காவியத்தை
கொல்லும் விசத்தரசு கொன்று புதைகுழியைக்
கெல்லி எடுத்ததடம் இன்றிணையம் தந்ததம்மா!
போர்வேண்டாம் எங்கள் பிடிமண்ணில் மக்களெலாம்
சீர்செய்ய வேண்டும்மெனச் செய்த குமரனெனும்
பத்மநாதன் தன்னை பழியாய்க் கடத்திவிட்டார்!
செத்தவினம் மீண்டும் செரித்துச் சரிந்ததடா!
கல்வித் தமிழ்மாந்தர், காட்டும் இளங்குருத்தர்
வல்லோர் கணினியிலே வாய்பாடு கொண்டவர்கள்
எல்லோர்க்கும் இந்த இராசபக்ச கூற்றுவனாய்க்
கொல்லும் சிறுமைக் கொடியவனாய்க் கண்ணுற்றோம்!
இத்தனைக்கும் மேற்துன்பம் ஏதும் இருக்கிறதா?
நத்துக் கரையும் நடுமிரவாய் ஆய்ச்சுதடா!
அறுபது ஆண்டுகளாய் ஆய்க்கினையும் கொல்லும்
உறுவதையும் ஆக உரிஞ்சு விழுகிறதே!
முந்தைப் புராணமதை மொய்த்த அரக்கர்போல்
இந்தப் புராண இராசபக்சா வந்தான்காண்!
அய்ம்பதி னாயிரம் ஆர்தமிழர் சாகவென
வெய்ம்குண்டு போட்டு விழுத்தியவன் கோத்தனெனும்
தம்பி இரசாபக்கா, தக்கரினப் பொன்சேகா
கும்பரெலாம் அந்தக் குலமே, அரக்கரென
அன்றைக்குச் சொன்ன அடுக்கில் முளைத்தவரே!
இற்றை அரக்கம் இராசபக்சா கொல்குடும்பப்
புற்றை எழுதிடுவாய் பேய்இந்தி யர்நாடு
சோனியளே வந்து செகத்தீழம் தானழிக்க
கூனியளாய் நின்றாள்பார்! இத்தாலி யூர்ப்பாளின்
சாதிக்கு எங்கள் சரித்திரங்கள் தேராதே!
மோதி அழித்துவிட்டு மேடாக்கிப் போனாரே!
ஈழப்போர் மண்ணில் இடர்பெற்ற தாயின்எம்
ஆழமன தெங்கள் அறம்தர்மம் வீழாதே!
சாகாத தேசச் சரித்திரத்தின் சூரியனாம்
பாகாக நிற்பான், பரிதவிக்கும் எம்மினத்தின்
தேசாக நிற்பான், திருத்தமிழர் பட்டமரம்
ஆகாரே என்பதினால் அண்ணன் கரிகாலன்
வேகாத தெய்வன் வீற்றிருந்து, பாருலகில்
போரும் மணிநிலமும் போற்றிவைத்த ஆட்சியாய்
யாரும்கா ணாதவொரு யாப்பைஉரு வாக்கியவன்!
சேரும் திருவினையும் சேர்த்தெழுதும் வெண்பாக்கள்
காரும், விசும்பினொடு, கார்வளியும் காத்திருக்கும்!
எட்டப்பம் வந்து இனத்தை அழித்தகதை
கெட்டப்பர் கொட்டம், கொடியர் அந்நியனுள்
வட்டம்பம் சுட்ட வரலாறும் இன்றிருக்கும்
அட்டியிலே அந்நியரின் ஆட்சியிலே வீற்றிருக்கும்
சொந்த இனமெரித்த செல்லருக்கும் உண்டேயாம்!
இந்த வரலாறும் எம்மினத்தின் சாவினிலே
நொந்த வரலாற்றின் நெடும்பக்கம் தானறிவீர்!
இந்த வகையாக ஈற்றில் தமிழ்மண்ணை
சந்தியிலே வைத்துச் சவக்கிடங்கு ஆக்கியவன்
எந்த உலகத்தும் இல்லாத காரணத்தால்
இந்தப் பொழுது இவரே அரக்கரடா!
மானமொரு கையில் மறுகையில் தன்முயற்சி
ஆன இனச்சிறகை அகிலத்தின் கண்முன்னே
ஈனப் பிறவி இராசபக்ச அழித்தான்காண்!
அய்நாவின் பான்கிமூன் அச்சச்சோ என்றுசென்று
பொய்முகத்தைக் காட்டிப் புழுதியிலே நீர்வார்த்து
மூன்று இலட்சம் முகாமில் இறந்தோரைப்
போன்று இருந்தோரைப் பேன்பார்த்து விட்டதுபோல்
பத்து நிமிடத்தில் பான்கி திரும்பினர்காண்!
செத்த உலகத்தைச் சீருலகம் என்றார்காண்!
வெள்ளைக் கொடியோடு வெளியே புகுந்தவரை
தள்ளிச் சவக்கிடங்காய்ச் சரித்தவரைக் கூட்டாக
அய்நாவும் பொய்நாவும் அச்சுவெல்லம் என்கின்ற
செய்வினைகள் தன்னாலே செத்ததுபார் மானுடங்கள்!
அகிம்சை தொடங்கி அறுபதாண் டீறாக
மகிந்தக் குகைவரைக்கும் வாதையிலே மாய்ந்தோம்நாம்!
காலப் பெரும்புதரில் கட்டவிழ்ந்தோம், பல்நாடு
மூலம் வெடித்துவிழ மூச்சாகி வந்ததினால்
தர்மப் பெரும்போர்த் தமிழரே சாவடைந்தார்!
வர்மப் பகைவன் வடித்தழித்தான் இற்றைக்கும்
இந்தியமும் எங்கள் இனம்கொடுத்த எட்டப்பர்
பந்தியிலே சிங்கப் பகைவன்கால் நக்கியதால்
நாடாகக் கோடிட்ட நம்மீழச் சக்கரங்கள்
கூடாக வீழ்ந்த குலப்பரணி ஆனாலும்
ஞாலக் கருவிளக்கும் நற்பணியும் மாஞ்சிறகின்
ஈழக்கதை ஆர்த்து எழும்முரசு கேட்குதடா!
நாடு கடந்து நலத்தமிழர் நல்லரசைக்
கூடும் வகையாகக் கோடிட்ட போதுவரை
மேன்மைப் புலிவெண்பா மேவி வருகுதுபார்!
கோன்மை மனிதவளம் கொண்ட நிலச்சிறகை
ஏழுலகும் வாழ்தமிழர் ஏற்றுப் புதுயுகத்தைச்
சூழும் அரசமைப்பார் சொல்!


(புலிவெண்பா முன்னுரை)

Friday, August 28, 2009

சாகவோ இன்னும்..இன்னும்!




இந்தநூற் றாண்டின் கெட்ட
இராட்சதன் இவனே என்க
வந்திடும் செய்தி காட்டும்
வடிவத்தைப் பார்த்தோம்! அந்தோ
கந்தகத் தீயில் ஈழக்
கனிநிலம் எரித்த பின்னும்
குந்தகன் நின்றா னில்லைக்
கொடியவன் அரக்கம் பாரீர்!

வெற்றுடல் ஆக்கிக் காலால்
வீழ்த்திய பின்னாற் சுட்டுப்
புற்றிலே சடலம் போடும்
புல்லரைப் பாரும் அம்மா!
கற்றிலா மூடர் அற்பக்
கயவரை நம்பிப் பாம்புப்
பற்றையான் கூட்டுக் குள்ளே
பாய்ந்ததாய் முடிந்து போச்சே!

நரகாசு ரன்கள் என்க
நர்த்தனம் போடும் ஆட்சிப்
பரதேசிக் கயவர் எம்மைப்
பாகுபா டின்றி வைத்த
வரலாறு என்றும் உண்டா?
வடிவமே கொலையும் கொள்ளைக்
கரமேதான் உடையார் இந்தக்
காலமும் அழித்தே விட்டார்!

பாணந்து றையி லன்றப்
பார்ப்பன ஐயர் கொன்றார்
நாணமே யில்லா ரிந்த
நாள்வரை தொடரு கின்றார்
மாணறி வுள்ளார் சில்லோர்
மதியுரை பகர்ந்தும் என்ன?
பேணறி வில்லார் ஆட்சிப்
பேயரே வெறியாய் நின்றார்!

இந்திய நாடு செய்த
இழிசெயல் தன்னிற் றானே
வெந்துசாம் புகையாய்ப் போக
வீழ்ந்தது தமிழன் பூமி!
குந்தகம் செய்தார் இந்திக்
கொடியர்காங் கிரசுக் கும்பல்
சிந்தையில் இல்லார் சிங்கச்
சேனைக்குள் நுழைந்து வந்தார்!

கன்னியர் தாமும் வல்ல
கனித்தமிழ் இளையோர் பிஞ்சுச்
சின்னரும் பாலர் மூத்தோர்
சீரிய அறிஞர் எல்லாம்
பின்னிய வரக்க னாலே
போயினர் சடல மாகச்
சென்னியை உசுப்பா விட்டால்
சாகுமெம் சாதி தானே!
-புதியபாரதி

Saturday, August 15, 2009

கதவம் திறக்கமுன்...

கதவம் திறக்கமுன்...
(புலிவெண்பா மனமும்-கனமும்)


கதவம் திறக்குமுன் கண்மணிகாள் எங்கள்
பதறும் நிலைகண்டும் பாடல் திறக்கின்றேன்!
மாற்றான் வரித்தநிலை வந்துற்ற வேளையிலும்
கூற்றாய் அவன்விரித்த கொட்டும் விசக்கோடு
ஊற்றுநிலம் மீதேறி ஊறணிகள் தேன்சுவடுக்
காற்றுத் திசையெங்கும் காடேறி யாய்வந்தும்,
போற்றும் தலைவன் புறமுதுகு காட்டாமல்
நேற்று அவன்வாயில் நின்றென்ன சொன்னானோ
கீற்றும் பிசகானாய்க் கேளங்கே நின்றான்காண்!
மக்களுக் கென்ன வாதையோ தான்பெற்ற
மக்களுக்கும் என்றே மறப்போரைக் கண்டானே!
வீராதி வீரன் விடிவுப் பெருவெள்ளி
போராடும் தீரன், பிரியமகன் சாள்ஸ்சைத்தன்
நேரோடு போர்க்களத்தில் நெஞ்சுரத்தைக் கண்டும்தன்
சீரோடு போர்த்தமகள் துர்க்காப் பசுங்கிளியைப்
போராடு என்றே புலிமகளாய் ஆக்கியவன்
மக்கள் உடைத்தான வாதையிலே தான்மட்டும்
திக்கில் பறக்கத் திருத்தலைவன் எண்ணாணாய்
முள்ளிவாய்க் காலென்றும் முல்லை நகரென்றும்
பிள்ளைப் பிரபா பிரிய நிலப்போரில்
வெந்து மணற்காடு வீறிட்டுத் தீயாகும்
நந்திக் கடலெங்கும் நாயகனாய் நின்றான்காண்!
பல்லாயி ரத்தோராய்ப் பாடம் எடுத்துவந்த
சொல்லாரும் வல்புலிகள் தேசார் தளபதிகள்
எல்லோரும் நின்றே ஏறுபோர் கண்டானே!
கல்லு வெடிப்பதுபோல் காடுறையும் வாய்க்காலும்
இந்தியம் வந்து இனவழிப்புக் கூற்றுவனைத்
சொந்தம் எனத்தழுவிச் சேரீழம் நின்றதினால்
நச்சு வெடிப்புகைகள் நாச விசக்குண்டுக்
கச்சைக்குள் வைத்துக் கயவனொடு நின்றார்காண்!
வேழாதி வேழம் விறல்மறவர் போராடும்
ஈழம் எனவொருத்தர் இல்லாமல் செய்வதற்காய்
கூழாய் மலிந்ததொரு இந்தியத்தின் கூடாத
பாழாகி என்தமிழர் பல்லாயி ரம்செத்தார்!
தேசப் பிரபா செருக்களத்தில் ஆடுகளம்
வீசி எறிந்தானா? வெங்களத்தில் ஊடறுத்துக்
கால மணிச்சுவடு கண்டறியப் பார்த்தானாய்
கோல முகவடிவன் கொண்டுகளம் வருவானா?
ஏதும் அறியாராய் இன்றுலகம் காண்தமிழன்
வாதும் வருத்தமுமாய் வண்ணமுகம் தேடுகிறார்!
சூதின் அரசாங்கம் சொல்லரிய துன்பத்தைப்
பேதியாய் ஊதும் பெருங்கொடுமை தன்னில்
அறுபதுகள் தொட்டு இனவழிப்புப் காட்டும்
உறுவதைகள் எல்லாமும் இன்னும் நெடுக்கிறதே!
முட்கம்பிக் குள்ளே மழையும் மலங்களுமாய்
உட்கிடத்தி எங்கள் இனத்தை அழிக்கின்றான்!
புதுவை, கரிகாலன், பாலகுமார், யோகி
நதிபோல வாய்த்த நறுந்தமிழர் காவியத்தை
கொல்லும் விசத்தரசு கொன்று புதைகுழியைக்
கெல்லி எடுத்ததடம் இன்றிணையம் தந்ததம்மா!
போர்வேண்டாம் எங்கள் பிடிமண்ணில் மக்களெலாம்
சீர்செய்ய வேண்டும்மெனச் செய்த குமரனெனும்
பத்மநாதன் தன்னை பழியாய்க் கடத்திவிட்டார்
இத்தனைக்கும் மேற்துன்பம் எங்கும் இருக்கிறதா?
அறுபது ஆண்டுகளாய் ஆய்க்கினையும் கொல்லும்
உறுவதைகள் இப்போதும் ஊத்தையாய் வீழ்கிறதே!
முந்தைப் புராணங்கள் மொய்த்த அரக்கர்போல்
இந்தப் புராணத்தும் ராசபக்சா வந்தான்காண்!
அய்ம்பதி னாயிரமாய் ஆருயிர்த் தேசத்தில்
வெய்ம்குண்டு போட்டு விழுத்தியவன் கோத்தனெனும்
தம்பி இரசாபக்கா, தக்கரினப் பொன்சேகா
கும்பரெலாம் அந்தக் குலமே, அரக்கரென
அன்றைக்குச் சொன்ன அடுக்கெல்லாம் கொன்றொழிக்கும்
இன்றை அரக்கம் இராசபக்சா கொல்குடும்பம்
என்றே எழுதிடுவாய் இந்தியத்துப் பேய்க்குடும்பம்
சோனியளே வந்து சுகத்தீழம் தானழிக்க
கூனியளாய் வந்தாள்காண்! இத்தாலி யூர்ப்பாளின்
சாதிக்கு எங்கள் சரித்திரங்கள் தேராதே!
மோதி அழித்தவர்கள் மேடாக்கிப் போனாரே!
ஈழப்போர் ஒன்று இடர்கண்ட காரணத்தால்
ஆழமன தெங்கள் அறம்தர்மம் வீழாதே!
சாகாத தேசச் சரித்திரத்தின் சூரியனாம்
பாகாக நிற்பான், பரிதவிக்கும் எம்மினத்தின்
தேசாக நிற்பான், திருத்தமிழர் பட்டமரம்
ஆகாரே என்பதினால் அண்ணன் கரிகாலன்
வேகாத தெய்வன் வீற்றிருப்பான், என்றே
போரும் மணிநிலமும் போற்றிவைத்த ஆட்சியாய்
யாரும்கா ணாதவொரு யாப்பைஉரு வாக்கியவன்!
சேரும் புகழும் செறித்தெழுதும் வெண்பாக்கள்
காரும், விசும்பினொடு, கார்வளியும் காத்திருக்கும்!
எட்டப்பம் வந்து இனத்தை அழித்தகதை
கெட்டப்பர் கொட்டம், கொடியர் அந்நியனுள்
வட்டம்பம் சுட்ட வரலாறும் இன்றிருக்கும்
அட்டியிலே அந்நியரின் ஆட்சியிலே வீற்றிருக்கும்
இந்த வரலாறும் எம்மினத்தின் சாவினிலே
நொந்த வரலாற்றின் நெடும்பக்கம் தானறிவீர்!
சொந்த இனமெரித்த செல்லருக்கும் உண்டேயாம்!
காலப் பெரும்புதரில் கட்டவிழ்த்துப் போகாமல்
ஞாலம் படைக்கவந்த நல்வெண்பா ஈதறிவீர்!
(புலிவெண்பா முன்னுரை)
-புதியபாரதி

Saturday, August 8, 2009

இந்தநாட்கள்...


இந்தநாட்கள்...

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கா
எனவும் இன்னும் இருபது நாடுகளும்
தொடுத்த தமிழின அழிப்பால்,
ஐம்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம்
வரையான ஈழத் தமிழ்
மக்களைக் காவு கொண்டபின்,
மூன்று இலட்சம் தமிழர்களை
முட்கம்பிக்கு உள்ளே
அடைக்கப்பட்டிருக்கும் இன்றைய நாளில்..
இன்னொரு அவலம்
நடந்தேறியிருக்கிறது..

நாட்டுக்கு வெளியேயான தமிழீழ அரசொன்றை
அமைப்பதற்காக நடவடிக்கை ஒன்றை
எடுப்பதற்கான ஒழுக்காற்று வரைமுறைகளை
மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில்,
அதன் பொறுப்பாளராகச்
செயற்பட்ட-கே.பி என அழைக்கப்படுபடும்
செல்வராசா பத்மநாதன் அவர்கள்
சிறீலங்கா அரசால் கடத்தப்பட்டிருக்கின்ற
சமநேரத்தில் இந்தப் பக்கம் உங்கள்முன்
வருகிறது.

மலேசியாவில் இருந்தே கடத்தப்பட்டார் என்ற
செய்தியே இதுவரைக்கும் சரியாக இருக்கிறது..

நூறுவரையான புலிகள் அமைப்பின்
நுண்ணறிவாளர்கள் முதல், போராளித்
தலைவர்கள்வரையில் கொன்றொழிக்கப்பட்ட
செய்திகள் இணையத்தளங்களில் வந்து
ஓரிரு கிழமைகள் ஆனபின்
இந்தச் செய்தி இப்போது..

உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்
வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும்
நடத்தப்படுகின்ற நாள் இது..

ஆகமொத்தம் தமிழனின் வாழ்வோடு
விளையாடுகின்ற சகல விடயங்களும்
சகட்டு மேனியாய் சந்திக்கின்ற நேரம்..

தமிழன் வாழும் கிழக்கு மாகாணத்தின்
அரைவாசிக்கு மேற்பட்ட காணிகள்
அரசாங்கத்திற்குத்தான் சொந்தம் என
பாராளுமன்றத்தில் ஒரு அறிவிப்பு வருகிறது..

வடமாகாணத்தின் எண்பத்தியேழு சதவீதமான
பூமியும் அரசாங்கத்திற்குச் சொந்தமெனவும்
அதே அறிவிப்பு வருகிறது..

இந்த அறிவிப்புகள் வருகின்ற சபையிலே
அரசாங்கத்தின் சார்பாக இருக்கும்
கருணா என்ற முரளீதரனும்..
டக்ளஸ் என்ற வடக்கின் வசந்தமும்
சிறீலங்காச் சுதந்திரக்கட்சியின்
சிங்கவால்களாகச் சுருட்டி அள்ள
வந்திருக்கும் சமநேரம்...

குட்டியைத் தாய் யானையிடம் இருந்து பிரித்தால்,
சட்டம் மிருகவதை என்று வருகின்ற நாட்டில்
மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளுக்கு இடையில்
அடக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற
மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்
மனோ கணேசன் கூறியதும் கூடத்
துடித்து வந்ததும் நேற்றுத்தான்..

சராசரியாக இந்த மனிதத்துவக்
குரலின் கடைசி எழுத்துக்களாகக் கூட
வாய்திறக்காத டக்ளசும் கருணாவும்
இராசபக்சா மடியில்...இருந்தபடி
இனத்தை அழிகும் இராட்சதருக்கு
இனத்தை விற்கும் தமிழர்களாக..
இருந்தபடி எத்தனை காட்சிகள்..

முற்றிலுமாகத் தமிழனைத் தமிழன்
காட்டிக் கொடுத்த வரலாற்றினைச்
சுமந்தபடி வடக்கின் வசந்தம் என்ற
டக்ளஸ் தேவானந்தாவும்,
கிழக்கின் உதயம் என்ற
காட்டிக் கொடுத்த கர்மவியாதி என்ற
பட்டத்தைக் கழுத்தில் சுமக்கும்
கருணா என்ற முரளீதரனும்,
சிறீலங்காச் சுதந்திரக்கட்சியில்
தேர்தல் களத்தில்
ஊருக்குள் வந்துவிட்ட 'உறுமயா'க்கள்..

தேர்தலுக்காக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும்
காசும், அடக்குமுறையுமாக
வீசுகின்ற தேர்தலில்
எத்தனை அடாவடிகள்..

தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர் தன்கணவன் என
முரளீதரனின் மனைவி பேட்டிகொடுத்தவைகள்
இன்னமும் காற்றில் இருந்து
கரைந்துவிடவில்லை..

இன்னும் ஒருமாதம் வரையில் கருணா திருந்தாதவரையில்
என்னால் பொறுக்க முடியாது என்ற அவரது மனைவியும்,
மூன்று குழந்தைகளும் மேற்குலகு ஒன்றில்
வாழ்ந்தபடி..கருணா என்ற இந்தக் கர்ம விசத்தின்
கொழும்புக் காட்சிகளைப் பார்த்தபடி இருக்கும்
நாட்களும் இதுதான்..

அய்க்கிய நாடுகளின் அமைப்பு வைத்திருக்கும்
மனித சாசனத்தின் மீதான சத்தியத்தின்
மறுபக்கமாகப் புத்த சாசனத்தைத் திருத்தியிருக்கும்
இராட்சதர் இராசபக்சவின் கைகளில்
இன்னமும் தமிழினம் அழிகிறது..

வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களைச்
சுட்டு வீழ்த்தினார்கள்..

அடைக்கலம் என்று வந்தவர்களை
படைக்கலம் போட்டுப் பிடித்து அழித்தார்கள்..

வீரமும் அறிவும் பெற்ற தமிழ்ச்சாதியை
ஊறணி இன்றி அழிப்பதே இந்தியம் எடுத்த
இன்றைய மந்திரம்..

இந்துக் கோவில்களின் அடித்தளமே இல்லாமல்
எத்தனையோ கோவில்கள்
அழிக்கப்பட்டாயிற்று..

இராமர் பாதம்பட்ட சேது சமுத்திரத்திற்கு
இந்துமதம் சார்ப்பில் எத்தனை கூச்சல்கள்..

இந்துக் கோவில்கள்..இந்துக் குருவானவர்கள்
சுடப்பட்ட அநாகரிகங்கள்.. எல்லாமும்
பார்த்தபடி ஒரு இந்துக்கள் சார்பில் ஒரு..
இந்திய நாடு..

நஞ்சையும் விழுங்கவல்ல தமிழ்நாடு
இருக்கும் வரையில்..வடக்கு இந்தியாவின்
வாலில்தான் தமிழ்நாடு இருக்கும்.

திருவள்ளுவர் சிலைக்கு எதிராக
இலட்சம் கன்னடர்கள் தெருக்களில் திரண்டார்கள்..

ஈழத்தமிழன் சாகக் காரணமான
சோனியாவையும் கருணாநிதியையும்
தேர்தல் கல்யாணத்தில் சேர்த்திருக்கிறது
தமிழ்நாடு..

தமிழ்மொழி சிதைக்கப்படும் முதல்நிலம்
சென்னைதான்..

சென்னைத் தமிழுக்கு புதுமொழியாக
அறிவிக்கும் காலம் அருகில் இருக்கிறது..

நூறு சொற்கள் பேசினால் எழுபது சொற்கள்
ஆங்கிலத்தில் அல்லவா வருகிறது..

சோறா.. அதுஎன்னா அது..றைஸ்என்று
சொல்லுசாமி.. என்கும் தமிழகத்தானிடம்
எங்கே இருக்கிறது தமிழ்..

நேர்காணலையும், பேட்டியையும் தமிழகச்
சினிமாக் களத்தில் எடுத்துப்பாருங்கள்..

அடேங்கப்பா ஆங்கிலத்தில் பிச்சுப்புடுறாங்கள்..பிச்சு..

அதேநேரம் ஆங்கிலம் தெரியாத விசயகாந்துக்கு
முப்பத்திஐந்து இலட்சம் வாக்குகள்..

தமிழீழத்தை எரித்த வாக்குகளும் இதுதான்..

மொத்தத்தில் பொன்மனச் செம்மலுக்குப் பின்னாலே
தன்நிலையை இழந்தது தமிழ்நாடு..

உச்ச-உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கூட தமிழில்
இருக்கக் கூடாது என்பது சட்டம் என்பதாகப்
படித்தேன்..

அரசாங்கப் பெயர்ப்பலகைகளில், நெடுவீதிகளில்
இந்திதான் முதலில் இருக்க வேண்டுமெனவும்-
இருக்கிறது எனவும் இணையங்களில்
படித்துக் கொண்டேன்..

வக்கற்ற தமிழன் அதிகாரங்களில்..
திக்கற்ற தமிழினம் தேசங்களில்..

காலப்பழி.. மீண்டும் கடுகதியில்..
-எல்லாளன்..

Tuesday, August 4, 2009

அரசொன்று செய்வீர்!

நாடுகள் கடந்த நாடு
நமக்குளே வேண்டும் போடு
ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ்
ஆக்கிய தமிழர் ஈழம்
கூடுகள் கலைந்த தாகக்
குலவுமண் சாம்பல் ஆன
பாடுகள் பட்ட பின்னால்
பார்த்திருப் போமா சொல்வீர்?

துருக்கியக் கரையில் யூதர்
துளைத்துமே பசுமை செய்த
பொருப்பிலே ஆற்றை ஏற்றிப்
பொழிலெனப் பசுமை கண்டார்
கருக்கொடு எதிரி வந்து
கஞ்சலாய் எரித்த பின்னும்
நெருப்பிலே இஸ்ரேல் பூத்த
நிகழ்வதை நெஞ்சில் அள்ளாய்!

வயலெலாம் எரிந்த பின்னும்
வளமெலாம் புகைந்த பின்னும்
அயலெலாம் மக்கள் தீயில்
அவலமாய் எரிந்த பின்னும்
வியட்னமின் பூமி என்ன
வீழ்ந்ததா? தமிழா சொல்வாய்!
அயற்சிகொள் ளாதீர் ஈழ
அரசதைப் புலத்திற் செய்வீர்!

இராட்சதன் என்கப் போட்டு
இயமனாய் எரித்த காட்சி
இராசபக் சாவின் காலம்
எழுதிய தாயின் வையம்
தராசிலே இட்ட தாமோ?
தரணியின் அயினா! எம்மைக்
குரோதமாய்த் தானே பக்சக்
கொடியரைக் காத்தார் கொள்வீர்!

இந்தியப் பருக்கை நாடு
ஈழத்தை எரித்து விட்டு
மந்திரிப் பதவி கண்டு
மசக்கையில் கிடப்பார் எங்கள்
வெந்தவோர் பிஞ்சைப், பெண்கள்
வேதனைக் குரலைக் கேளார்!
அந்தகர் பின்னால் நின்று
ஆவதொன் றில்லைக் காணீர்!

அரசொன்று போடு! இந்த
அகிலமெல் லாமும் கூடு!
முரசென்று கூவு! லங்கா
முடித்ததை எங்கும் கூறு!
அரசியல் பாதை யோடு
அகிலத்தை ஆக்கு! வையப்
பரம்பினிற் தமிழீ ழத்தைப்
பரப்பிடு! வெல்லும் நாடு!

-புதியபாரதி

Friday, July 31, 2009

உதித்தவேர் சாகாது..!




இது இருபத்தியோராம் நூற்றாண்டு.

இராட்சதர்கள் இல்லாத இந்த நூற்றாண்டில்
இராசபக்ச வந்து ஈழத்தில் விழுந்தான்..!

கூனி இல்லாக் குறையைச்
சோனியா நிரப்பினாள்..

துச்சாதனர்கள் கூட்டங்கள்
சிதம்பரம், சோ, இந்து ராம், என்றவாறு..
குதங்களாய் விரிந்தன..

சகுனிக்காக வந்து முழுநரியாகினான் மூத்த
கருணாநிதி..

எட்டப்பன், காக்கை இல்லாக் குறையை
டக்ளஸ், கருணாவால் நிரம்பியது
களச்சரிதம்..!

மூட்டைப் பூச்சி என்று
வீட்டைக் கொழுத்திய இந்த
வீரவாகுகள் எழுதிய சரித்திரம் இந்த
நூற்றாண்டின் இரத்தப்பழி..

புதிய இட்லருக்குத் தீனிபோட்டன இந்த
அநியாயங்கள்..

பச்சைப்பசேல் நிலங்களை
இச்சைப்படியே எரித்தார்கள்..

ஈழத்தை முற்று முழுதாக எரித்தாவது
ஒரு தமிழினத்தின் எழுச்சியை
முடிக்கத் துடித்தவர்கள் இவர்கள்..

முல்லைப் போரில் பல்லாயிரம் மக்களை
ஒருசேரக் கொன்று குவிக்க, இந்திய
புலனாய்வுத்துறை அதிகாரிகள்
ஐம்பதுபேர் வவுனியாவில்
அடுக்காக நின்றகதை இப்பொழுது
ஆலாபரணம் எடுக்கிறது..!

சீனா, பாகிஸ்தான், உருசியா, இந்தியா..
புடுங்கப்பாடுகள் எல்லாம் மலங்கக் கிடத்திவிட்டு
ஈனக்கழிவுகளாய் இறங்கிக்கொண்டன..

இளைய யுவதிகளை இழுத்துக்
குடித்தன இராசபக்சன் படைகள்..

போருக்கு முந்தியும் பிந்தியும்
நாளுக்குநாள் மறையும்
நம்மவர்கள்..

போர் முடிந்தாலும் கடத்தல்
முடியவில்லை..

ஆணாகவும் பெண்ணாகவும்
காணாமல் முடிக்கின்றன
கறுத்தப் பூனைகள்..

போர் முடிந்துவிட்டதாகப்
போப்பாண்டவர்வரைக்கும் சொல்லியது
இந்தச் சிங்கள தேசம்..

ஆனாலும் இன்னமும் மீன்பிடித்தடை..

நல்லூரான் வேளையிலும்
மல்லுக்கு நிற்கிறது ஊரடங்கு..

மூன்று இலட்சம் மக்கள் முகாமுக்குள்
பட்டினி..

கொழும்பில் பூஞ்சணவனோடு
வணங்காமண் பொருட்கள்..

இந்த நேரத்திலாவது
ம(கி)ந்தபுத்தி மாறவில்லை..

நல்லகாரியம் செய்ய இந்தச்
செல்லரித்தவனுக்குச் சிரசு விடவில்லை..

தமிழனைக் கையேந்த வைக்கும்
எழியவனாகவே..இவனும், இந்த நாடுகளும்..
இலங்காவும்..

இராசபக்சவுக்கு இந்தியாவின்
எத்தனை எத்தனை வளைகாப்புகள்..

நரகாசுரனுக்கு அய்நா மன்றத்தில்
ஆபத்தைத் தடுத்தது முதல்
ஆதரவுக் கடன்களுக்கு
அகிலத்தை வரித்தது இந்தியா..

சிரட்டை எடுத்துக் கூனிக்குறுகும்
ஒரேஒரு மாநிலம் தமிழ்நாடு..

ஈழம் பிறந்தால் தமிழனுக்கு மானம்
பிறக்கும் என்ற காரணத்தால்
மலையாள ம(h)ந்திரிகளால்
ஈழமண்ணை எரித்து தமிழகம்
அமிழப் புதைக்கப்பட்டது..

எல்லாமும் ஏன்?

வீரம்செறிந்த தமிழினம்
வீழ்த்தப்பட விரும்பியது இந்தியம்..

இன்னொரு இசப்பான்..இன்னொரு இசுரேல்..
இன்னொரு வல்லரசு இனிமேலுமா..

பிரபாகரனுக்குப் பயந்தது
பேய்பிடித்த உலகம்..

சாதிகளில்லாச் சமுதாயம்..
பிணக்குகள் இல்லாப் பேராட்சி..
கலையும், பண்பாடும் கண்காட்சிகள்..
சுத்தத் தமிழில் மனிதப்பெயரும்
வணிகப் பெயருமாய்...
அற்புத உலகத்தை எப்படி இவனால்
சமைக்க முடிந்தது..

உயிரைக்கொடு என்றால்
பயிர்களும் அல்லவா படை
சமைக்கின்றன..

கரும்புலிக்கு விரும்பியவாறு
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இந்தக்
கண்மணிகள்..

ஓ..இந்தச் சமுதாயம்..
கரிகாலன் மட்டுமே கருத்தரிக்க முடியும்..

எரிக்க நினைத்தார்கள்..

இருபது நாடுகள் கைகோர்த்தன..

பாகிஸ்தான் விமானிகளுக்கு அம்பாந்தோட்டையில்
காணிகள் கொடுக்கப்பட்டன..

சிறிலங்காக் கடவுச்சீட்டுகள்
இவர்களுக்கு..

இந்த விமானிகளை சிறீலங்காவின்
சொந்தமாக்கினான்.. இராசபக்ச..

ஈழத்தை எரித்து வேழத்தைப் புதைத்தது
இந்தக் கேடுகெட்ட உலகம்..

ஈழம் சாகுமா?

இசுரேல் செத்ததில்லை..

வியட்னாம் விழுந்ததில்லை..

கிட்லர்தான் செத்தான்..

யூதன்வேர் முடிந்ததா?

ஈழம் ஒருநாள் எடுத்தவேர் தளைக்கும்..

இலட்சமாய் முடிந்தோம்..ஆனாலும்
இலட்சியம் சாகாது...!

-எல்லாளன்..