Tuesday, December 30, 2008

சிந்திக்குமா உலகம்?




சிந்திக்குமா உலகம்?

சிறுவர்களுக்கும் படைக்கும்சிங்களவர்களுக்கும்..
தொடர்பு இருப்பதாக யார்சொன்னது?

சீ.. சீ... அதெல்லாம் பொய்..?

அய்யன்னா நாவன்னா அடிச்சுச் சொன்னதா?
இல்லையே?

பக்கத்து நாடு இந்தியா அப்படிப்
பார்த்ததாகத் தானும்
பகிடிக்கும் சொல்லவில்லையே..

புலிகளிடம் இருப்பதாகச் சொல்லிச்சொல்லி
உலக நாடுகளுக்குக்
காதுகுத்திச் செத்த
கதிர்காமர் இருந்திருந்தால்..

சிங்களப்படையும் சிறுவர்களும்
என்றுசொல்லியிருக்கவே மாட்டார்..

புலிகளிடம் சிறுவர்படை
இருப்பதாகக்கதையளந்த
கதிர்காமரும் காணாமல் போய்விட்டார்..

மீசையரும்பாமல்,
ஆசையரும்பாமல்
காசை அரும்பி வந்த
சிங்கக் காலாட்படைப் பெடியன்கள்..
செத்துக்கிடக்கும் காட்சி என்னபொய்யா?

சேற்றுக்குள் புதைய விட்டபடி செல்லும்
சிங்கள அரசின் சுயரூபம்..
அப்புகாமிக்கும் சுதுமெனிக்காவுக்கும்
இனித்தான் விளங்கும்..

ஏனென்கிறாயா?

அடையாள அட்டையோடு அல்லவா
சடலங்கள் சந்திக்கு வருகின்றன..?

செத்துக் கொண்டிருக்கும் தமிழினத்துக்கு
மத்தியில் இந்தஏழைச் சிங்களச்
சிறுவர்களுக்காகவும் உலகம் சிந்திக்குமா?
-சித்துமாதவன்

No comments:

Post a Comment