Tuesday, December 30, 2008

நிலப்பூக்கள்-பாடல்:03

3-

நிலப்பூக்கள்-பாடல்:03
3-தமிழீழ வஞ்சிக்கொடியே!

வைகறைக் கதிர்முற்ற வாசலிற் கோலங்கள்
வரைகின்ற வண்ண மாதர்
வருகின்ற தேவநற் மணியிசைப் போதிலே
மலர்கின்ற பூவின் ஓசை
மெய்யறத் துயிலெழும் மெல்லியர் தண்புனல்
மேனிநீ ராடு துறைகள்
மேவுபட் டாடையில் வாரிடும் நீரிலே
மிதக்கின்ற தேவ சிலைகள்
கைகளில் சந்நிதித் தையலர் தாங்கிய
கயல்விழி யார் வலங்கள்
கந்தனின் சந்நிதி மங்கையர் குங்குமம்
கனல்கின்ற தீப ரதங்கள்
தைவரப் பாடுமோர் தாதையர் கற்பிலே
தருமெங்கள் கூடற் பதியே
தாதையங் குரலிலே கோதையர் ஆடிடும்
தமிழீழ வஞ்சிக் கொடியே!

காற்றோடு மழையும்வான் இடியோடு மின்னலும்
கதிரோடும் நீச்சல் பட்டு
கனலோடும் புனலோடும் கடுங்கோடை தனிவெட்பக்
கடுமையும் இசைவு பட்டு
சோற்றுக்கும் உணவுக்கும் செல்வத்து மகிமைக்கும்
சிரசாக நின்ற மாந்தர்
சேயிழை வயல்கண்டு சிந்திடும் இசைமொண்டு
செய்பயிர் கண்ட மாந்தர்
நேற்றைக்கும் நேற்றைக்கு முன்னூழி ஆண்டுகள்
நிலமாடும் உழவர் கைகள்
நின்றலர் பொன்நிதி குன்றிலா நாட்டிலென்
நிகரிலா வச மாகுமே!
மாற்றுப்பொன் மண்ணிலே மருவுற்றுக் கவிபாட
வந்தாடு காதற் பதியே
மகரந்தப் பொடிசிந்தி மடிசிந்தி எழிலாடும்
தமிழீழ வஞ்கிக் கொடியே!

அலையோடு கடலாடத் தரையோடு அவைமோத
அவிழ்கின்ற வாடை பட்டு
அசைகின்ற செந்நெலும் தளிர்கொண்ட அடவியும்
அல்லிமந் தாரைஇ கமலம்
இலையோடு பூக்களும் எறிகின்ற காலையிற்
இதமாகும் தேச வார்ப்பு
இரைகின்ற வண்டினம் இசையிடும் பறவைகள்
இவையோடு இன்னு மாங்கே
மலையோடு குறிஞ்சியும் கடலோடு நெய்தலும்
மருதமார் முல்லை பாலை
மரகத மேனியில் மயிலாடும் பாறையில்
குயில்பாடும் காடு சோலை
வலையாடும் மீனிலும் கடலாடும் முத்திலும்
வணிகமிட் டழைத்த நாடே
வந்தாடும் தமிழிலே நின்றாடும் சொர்ணமே
தமிழீழ வஞ்சிக் கொடியே!

கிழக்கிலே கோணேசம்இ மேற்கிலே கேதீசம்
இடையிலே முன் னேஸ்வரம்
யாழ்நகர் நல்லையும் மாமாங்கப் பிள்ளையும்
யாகநெய்த் தெய்வ வீடு
தொழத்தொழ வரமிடும் நயினையம் பதியிலும்
மாவிட்ட கீரி மலையும்
தேசத்தில் கண்ணகிக் காலயம் அமைத்திட
திருவிதம் கண்ட நாடே
பழத்தொடு பாலுமாய் பளபளக் காவடி
பாட்டொடு தேவ பதியும்
பங்குக்கு மடுவிலே மேரியும் நாடெலாம்
யேசுவும் பள்ளி மிசனும்
அழைப்பிலே யோகரும் ஆத்மிக அடிகளும்
அசைகின்ற தெய்வ வீடே
ஆடிப்பொன் ஊஞ்சலில் கோடிப்பொன் மோதிடும்
தமிழீழ வஞ்சிக் கொடியே!

நின்னையான் நினைக்கின்ற போதிலே வேறெதும்
நினைவுக்குள் வீழ்வ தில்லை
நெஞ்சத்துக் கோவிலே நீயெந்த நாளிலும்
என்தமிழ் வாழும் எல்லை
உன்னையான் பிரியினும் என்னுயிர் அவ்விடம்
இருப்பதே இன்று உண்மை
இதமில்லைப் பதமில்லை எதனிலும் மோகித்து
இங்குநான் வாழ வில்லை
சொன்னபொய் ஒன்றில்லை தேசத்து வாசலின்
திசையிலே பார்வை வைத்தேன்
துயிலிடும் போதிலும் துஞ்சாத தேசத்தைத்
திருவீழி மீது கண்டேன்!
அன்னையென் தமிழிலே மின்னிடும் அமுதமே
அருங்கவிக் கிதைய நாடே
அணிமலர்க் காவிலே அணிலொடு யானைவாழ்
தமிழீழ வஞ்சிக் கொடியே!

தமிழீழ வஞ்சிக்கொடியே!
வைகறைக் கதிர்முற்ற வாசலிற் கோலங்கள்
வரைகின்ற வண்ண மாதர்
வருகின்ற தேவநற் மணியிசைப் போதிலே
மலர்கின்ற பூவின் ஓசை
மெய்யறத் துயிலெழும் மெல்லியர் தண்புனல்
மேனிநீ ராடு துறைகள்
மேவுபட் டாடையில் வாரிடும் நீரிலே
மிதக்கின்ற தேவ சிலைகள்
கைகளில் சந்நிதித் தையலர் தாங்கிய
கயல்விழி யார் வலங்கள்
கந்தனின் சந்நிதி மங்கையர் குங்குமம்
கனல்கின்ற தீப ரதங்கள்
தைவரப் பாடுமோர் தாதையர் கற்பிலே
தருமெங்கள் கூடற் பதியே
தாதையங் குரலிலே கோதையர் ஆடிடும்
தமிழீழ வஞ்சிக் கொடியே!

காற்றோடு மழையும்வான் இடியோடு மின்னலும்
கதிரோடும் நீச்சல் பட்டு
கனலோடும் புனலோடும் கடுங்கோடை தனிவெட்பக்
கடுமையும் இசைவு பட்டு
சோற்றுக்கும் உணவுக்கும் செல்வத்து மகிமைக்கும்
சிரசாக நின்ற மாந்தர்
சேயிழை வயல்கண்டு சிந்திடும் இசைமொண்டு
செய்பயிர் கண்ட மாந்தர்
நேற்றைக்கும் நேற்றைக்கு முன்னூழி ஆண்டுகள்
நிலமாடும் உழவர் கைகள்
நின்றலர் பொன்நிதி குன்றிலா நாட்டிலென்
நிகரிலா வச மாகுமே!
மாற்றுப்பொன் மண்ணிலே மருவுற்றுக் கவிபாட
வந்தாடு காதற் பதியே
மகரந்தப் பொடிசிந்தி மடிசிந்தி எழிலாடும்
தமிழீழ வஞ்கிக் கொடியே!

அலையோடு கடலாடத் தரையோடு அவைமோத
அவிழ்கின்ற வாடை பட்டு
அசைகின்ற செந்நெலும் தளிர்கொண்ட அடவியும்
அல்லிமந் தாரை கமலம்
இலையோடு பூக்களும் எறிகின்ற காலையிற்
இதமாகும் தேச வார்ப்பு
இரைகின்ற வண்டினம் இசையிடும் பறவைகள்
இவையோடு இன்னு மாங்கே
மலையோடு குறிஞ்சியும் கடலோடு நெய்தலும்
மருதமார் முல்லை பாலை
மரகத மேனியில் மயிலாடும் பாறையில்
குயில்பாடும் காடு சோலை
வலையாடும் மீனிலும் கடலாடும் முத்திலும்
வணிகமிட் டழைத்த நாடே
வந்தாடும் தமிழிலே நின்றாடும் சொர்ணமே
தமிழீழ வஞ்சிக் கொடியே!

கிழக்கிலே கோணேசம்இ மேற்கிலே கேதீசம்
இடையிலே முன் னேஸ்வரம்
யாழ்நகர் நல்லையும் மாமாங்கப் பிள்ளையும்
யாகநெய்த் தெய்வ வீடு
தொழத்தொழ வரமிடும் நயினையம் பதியிலும்
மாவிட்ட கீரி மலையும்
தேசத்தில் கண்ணகிக் காலயம் அமைத்திட
திருவிதம் கண்ட நாடே
பழத்தொடு பாலுமாய் பளபளக் காவடி
பாட்டொடு தேவ பதியும்
பங்குக்கு மடுவிலே மேரியும் நாடெலாம்
யேசுவும் பள்ளி மிசனும்
அழைப்பிலே யோகரும் ஆத்மிக அடிகளும்
அசைகின்ற தெய்வ வீடே
ஆடிப்பொன் ஊஞ்சலில் கோடிப்பொன் மோதிடும்
தமிழீழ வஞ்சிக் கொடியே!

நின்னையான் நினைக்கின்ற போதிலே வேறெதும்
நினைவுக்குள் வீழ்வ தில்லை
நெஞ்சத்துக் கோவிலே நீயெந்த நாளிலும்
என்தமிழ் வாழும் எல்லை
உன்னையான் பிரியினும் என்னுயிர் அவ்விடம்
இருப்பதே இன்று உண்மை
இதமில்லைப் பதமில்லை எதனிலும் மோகித்து
இங்குநான் வாழ வில்லை
சொன்னபொய் ஒன்றில்லை தேசத்து வாசலின்
திசையிலே பார்வை வைத்தேன்
துயிலிடும் போதிலும் துஞ்சாத தேசத்தைத்
திருவீழி மீது கண்டேன்!
அன்னையென் தமிழிலே மின்னிடும் அமுதமே
அருங்கவிக் கிதைய நாடே
அணிமலர்க் காவிலே அணிலொடு யானைவாழ்
தமிழீழ வஞ்சிக் கொடியே!


நிலப்பூக்கள் தொடரும்..

No comments:

Post a Comment