Saturday, March 21, 2009

எத்தனை காலம்தான் ...?-02


எத்தனை காலம்தான் ...?-02


சேலைகட்டிய வெள்ளைக்காரி
சோனியாவுக்குச் சோடியைப் பிரிந்த சோகம்...

கோபத்தை ஈழத்தின் மீது
கொடுத்ததினால் குப்பை மேடுகளாய்ப்
பிணங்கள்..

அன்று...பிரபாகரனைக் கொல்வது
ஒன்றுக்காகவே
எழுதப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம்
தமிழர்கள் இல்லாமலேயே
தாம்பாளம் இடப்பட்டது..

அன்று அரிசியைக் காட்டினார்கள்
தமிழ்மண்ணில்..

இன்று ஆயுதத்தைக் கொடுக்கிறார்கள்
இலங்காவின் கையில்..

இரண்டுமே தமிழர் போற்றும் தலைவன்
பிரபாகரனைக் கொல்வதற்காக..

இருபது தடவைகளில் ஏடுகளில்
பிரபாகரனைக் கொன்றது
இந்தியா..

வரலாற்றின் குரலை அடைக்க
கூகைக் குரல்களால் முடியுமா?

எத்தனை நாடுகள்.. எத்தனை ஆயுதங்கள்
எத்தனை கோயபல்ஸ்கள்..
எத்தனை துரோகிகள்..
எத்தனை எட்டப்பர்கள்..

இன்னும் இமயமாக நிற்கிறான் பிரபாகரன்..

வதைபடும் இனத்திற்காக வந்தவன் அல்லவா?

பிடரியில் அடிவாங்கிப் போன இரசீவுக்கு
முடமாகிக் கிடந்தது மூளை..

பார்த்தசாரதி என்ற ஆலோசகரைத்
தமிழன் என்ற காரணத்திற்காகத்
தடைபோட்ட இரசீவின் மூளை
இறுதியில் மூளையின் தடயங்கள்
இல்லாமலேயே முடிந்தது..!

கொலைக்கரங்கள் மடிக்குள்ளேயும்
இருப்பதற்குத் காரணமாகிய
மகுடிகளை இன்னும் எந்த
விசாரணைகளும் இல்லாமலேயே
இந்திரா வாரிசுகள் இருப்பதற்கான
காரணம் என்ன?

கொலையைத் தமிழர் தலைகளில்
எழுதிய தடயங்கள் அழியாமலேயே வைத்து
அலையலையாகத் அந்த அதே
தமிழர்களைக் கொன்று..
இந்தியத்தின் தென்னகத்தே ஒரு
இறையாண்மைத் தமிழகத்தை
அழிக்கத் துணிந்தது இந்தியம்..

குமுதம் நேர்காணலில் ஒரு
காங்கிரசான் சொன்னான்..
ஒரு எழுபத்தி ஐயாயிரம் அல்லது
ஒரு இலட்சம் தமிழர்களே..
முல்லைத்தீவில் இருப்பதாக...

இரண்டரை இலட்சத்திற்கு மேலாக
இருப்பதாக அல்லவா..
அய்நா அமைப்புகள் சொல்கின்றனவே என்ற
கேள்விக்கு அறிவிலான்
அளப்பினான்..

உண்மைகள் தெரியாமல்
இல்லாத உழுத்தன்
இரண்டு இலட்சம் மக்களை
அழிக்கும் அவாவில் இருப்பதை
அலசிக்காட்டினான்..

எழுந்திருக்கும் தமிழக உணர்வுகளுக்கு
ஆணியடித்தான் இந்த
அவலப் பிறப்பான்..

சிறையைப் பிளம்பாக ஆக்கி வைத்திருக்கும்
சீமான்களை எல்லாம்
சிறிசாக்கினான் இந்தச் சின்னவன்..

இந்திய ஆயுதங்களால்-
இந்திய ஆலோசனையாளர்களால்
ஈழப்போரை நடத்துகிறது இலங்கா என்று
சிங்களம் பாராளுமன்றத்தில்
சொல்லியிருக்கிறது..!

இதனால் சோனியா இதுவரை
சேலையில் மறைத்துக் கொடுத்த ஆயுதங்கள்
மூலைக்குமூலை வெளியே வந்தன..

ஒரு நீதிமன்றத்தால் கலைக்கப்பட்ட
ஒப்பந்தத்தின் வலுவைக் காட்டிய
சிங்களத்திற்கு வாலைமுறுக்கும்
இந்தியத்தின் தலையில்
என்ன இருக்கிறது..தமிழா?

தேனீருக்காகத் தமிழனின்
கச்சதீவைக் கைகழுவிய இந்தியம் அல்லவா?

இந்திய காங்கிரஸ் என்ற-
ஈழமக்களின் சாவுக்குக் காரணமான-
கற்பழித்து, ஆறாயிரம் மக்களை
நெரித்துக் கொன்ற இந்தத் தமிழின
இயமன்களை தமிழகத்தில் இருந்து
துரத்து தமிழா..!

நீதியின் பிளம்பே..
துடிக்கும் தமிழக இளைஞனே..
இந்தத் தரித்திரக் கும்பல்களை
அப்புறப்படுத்தும் அந்த
அற்புதம் உன்றன்
வாக்குகளில் அல்லாவா இருக்கிறது..

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
எங்க நாட்டிலே..
எங்க இனத்திலே...!

-எல்லாளன் எழுதுவது..

1 comment:

  1. //இதனால் சோனியா இதுவரை
    சேலையில் மறைத்துக் கொடுத்த ஆயுதங்கள்
    மூலைக்குமூலை வெளியே வந்தன//

    ஆகா....

    ReplyDelete