Wednesday, March 11, 2009

நீயெழு.. நீயெழு


நீயெழு.. நீயெழு

நீயெழு நீயெழு புலியே புலியே-எங்கள்
நிலத்தினில் ஆயிரம் வலியே.. –நீயெழு

சேயொடு தாயும் செத்து மடிகிறாள்-நீ
சிலிர்த்தெழும் நாளிது வெளியே.. –நீயெழு

பேய்விடும் குண்டு பிடரியில் விழுகுதே
பெயர்ந்த நிலங்கள் பற்றி எரியுதே
தாய்விடும் மூச்சு தாங்க முடியுமோ
தமிழ்ப்புலி நீயும் தூங்க முடியுமோ.. –நீயெழு

மரக்கிளை தன்னில் சதைகள் தொங்குதே
மகிந்தன் நரபலி வானம் இடியுதே
பரந்த தமிழினம் பதறித் துடிக்குதே
பாரும் வேடிக்கை பார்த்து இருக்குதே –நீயெழு..
-சோலைக்குயில்

No comments:

Post a Comment