Saturday, April 25, 2009

அறமே எழுந்துவா!




அறம்பாடு கின்றேனே அறத்தாளே எழுந்துவா
அசுரமடி கிழித்தெறிய ஆரோக ணித்துவா
திறம்பாடு கின்றேனே தீயூழித் தாயேவா
தீயர்பொய் சொல்லுகிறார் துரந்தரிநீ துடித்தெழடி
இறக்காடு நடத்துபவன் இராசபக்ச பாரடிநீ
இரசாய னக்குண்டை ஏவுகிறான் பாரடிநீ
மறக்காட்டுச் செந்தணலே மாகாளி துடித்துவா
மண்சாம்பல் ஆக்கிவரும் மகிந்தபடை அழித்துவா!

அன்றிந்திப் பேயரக்கம் அமைதிபடை என்றுவந்தார்
இரசீவின் கொடுமையிலே இனத்தமிழன் அழிந்தாரே
இன்றவளாம் சோனியாப்பேய் ஈழமண் அழிக்கின்றாள்
ஊழித்தீ அறம்காட்டு இவள்குணத்தை அழிக்காயோ?
சென்றவர்கள் தில்லிநகர்த் தேசத்தார் தீக்குணத்தால்
சிறீலங்காப் பொய்யருக்காய்த் தூதிட்டார் அழிக்காயோ?
கொன்றுபுதை ஆக்கிவரும் கூட்டாரைக் கண்டுவா
குஞ்சுகளே கருகுதடி குதித்துவா மறத்தாளே!

கருணாநி தியானே காசுமடி படுத்துறங்கும்
கழிவுபொய் சொல்லுகிறான் கண்டுவா செந்தணலே
பிரபாக ரன்தம்பி பிணமாக்கச் செய்வதற்காய்
பேசியவொப் பந்தமாய்ச் சோனியாக் கூட்டமொடு
கரம்கோர்த்துச் செல்லுமந்தக் காட்டாரைக் கொண்டுவா!
கணமொருபொய்க் கஞ்சலரைக் காணாயோ செந்தழலே
இரையாக்கி வாலயரை இறைஞ்சியள்ளி வல்லுறவில்
இராசபக்ச கோத்தபடை ஏவுகிறான் அழித்துவா!

ஈழத்தமிழ் உயிர்கள் இவர்களுக்கு விளையாட்டு
ஏழிலங்கைத் தீயாளே இறைஞ்சுகிறேன் எழுந்துவா
ஊழித்தீ யானவளே உத்தமியே குதித்துவா
இரசீவின் உயிருக்காய் இன்தமிழர் அழிப்பதுவோ?
ஆழிக்க டல்மகளே அதிரமண் இறங்காயோ?
அன்னைதந்தை சிறார்களென அலறுதடி பார்க்காயோ?
வாழியெனத் தமிழர்கை வந்துநீ வாழ்த்துகையில்
வதைகொடுக்கும் மகிந்தபடை வாலறுந்து போகுமடி!

சீதையவள் தொடுத்தாளே செந்தணலே எழுந்துவா!
திரபதை யம்மநகர்த் சுடுநெருப்பே எழுந்துவா!
பாதைத வறியதால் பாண்டியனை நீறாக்கிப்
பார்த்தகண் ணகியாளின் பண்புத்தீ எழுந்துவா!
நீதிக்கோ டழித்தவரை நீறாக்கு நீறாக்கு
நின்றுபார்மே னன்முகர்சி நாராய ணக்கும்பல்
கூதிப்பேய்ப் பொய்யரிடும் கூற்றங்கள் அழித்துவா
குடிலுயிர்கள் காத்திடவே கொழுந்தாளே எழுந்துவா!

-அக்கினிக்குஞ்சு
(Pray in every temple)

1 comment:

  1. அறம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தெரிய ஆவல் நண்பரே!

    ஈழத் தமிழர்களிடம் இன்று அது உள்ளதா?

    ReplyDelete