Saturday, April 11, 2009

இனவுணர்வு வெற்றியாகட்டும்..!


இனவுணர்வு வெற்றியாகட்டும்..!

என்னரும் தமிழா விஞ்சி
எழுகநீ தமிழா வட்டப்
பின்னறை போட்டு எங்கள்
பேடிகள் முகத்தைக் காண்பாய்
மன்னனாம் பிரபா என்றே
மகிந்தனே வைப்பாய் என்று
சொன்னவன் கருணா நிதிச்
சொறியவன் குணத்தைப் பாராய்!

தின்னவே பிரபா கத்தைப்
திருடர்கள் இருக்கார் என்ற
பின்னலை அவிட்டு வைத்த
பொய்மகன் கலைஞர் கூட்டின்
துன்னலைச் சோனி யாத்தாள்
திருடனாம் மகிந்தன் எல்லாம்
என்னவாய் இருக்கின் றார்பார்
எத்தனை கொடியர் அம்மா!

தமிழகத் தமிழா ஊற்றின்
தங்கத்தேர் மனித ஏடே
அமிழ்தினும் இனிய செந்தேன்
அன்னையாம் தமிழின் நாடே
கமழ்தரும் பிரபா ஏட்டைக்
கரியிடத் திட்டம் போட்டார்
சுமைதரும் சிங்க ளத்தின்
சீழ்க்கரம் நக்கு கின்றார்!

இந்திய காங்கி ரஸ்சார்
இந்தியம் முழுதும் துப்பும்
மந்தமா மலத்தை நக்கும்
வாலைநாய்ப் புடையர் எல்லாம்
சொந்தமாய் அடுக்க வோடா
துடைத்துநீ எறியாய் இந்தக்
கந்தல்கள் இருக்கும் நேரம்
கழிசடைக் காலம் கண்டோம்!

தீக்குளம் ஆகி நிற்கும்
தேசமாம் வன்னி காண்பாய்
நோக்குளம் கொண்டார் ஈழ
நெஞ்சுளார் வெற்றி வைப்பாய்
ஆக்கிடும் சமுதா யத்தை
ஆக்குநீ இல்லை என்றால்
ஈக்கள்தான் மொய்க்கும் எங்கள்
இனமெலாம் இன்னும் சாகும்!

எத்தனை நாட கங்கள்
இந்திய ஆட்சி செய்ய
மொத்தமாய் இருக்கும் கட்சி
முடிச்சுமா றிகளாய் வந்தார்
செத்திடும் சவங்கள் பார்த்தும்
சிங்களப் படைகள் பக்கம்
அத்திரம் கொடுக்கும் கூட்டம்
அடுக்குவை தானோ மாந்தீர்!

கலைஞரின் நாட கத்தில்
கண்ணீரைக் கொட்டா தீர்கள்
கொலையிடச் சோனிக் கூத்தாள்
கொண்டவாள் கொடுவாள் ஆகும்
அலையென முத்தான் தீயில்
அவிந்தவன் சொன்ன மூலம்
நிலையெடு வெற்றி யாக்கு
நின்கையில் இனத்தின் வாக்கு!

முத்தான்-முத்துக்குமரன்
-புதியபாரதி

No comments:

Post a Comment