Saturday, May 23, 2009

அழுகின்றோம்..


அழுகின்றோம்..
ஆனாலும்..
எழுகின்றோம்...!


இருபத்தியோராம் நூற்றாண்டு
இராசபக்சா என்ற கொடியோனின்
தமிழன் இனவழிப்பால்
இரத்தவெடில் பூசி;க்கொண்டது..

இந்திய-இலங்கைக் கூட்டில்
சகுனிகளும் கூனிகளும்
மகுடிகளாக்கப்பட, ஈழ மக்களின்
மனித அவலம்-மரண ஓலம்
பூகோளக் கோடுகள் எங்கும் இரத்தமயமானது..

பொன்மனச் செம்மல் எம்ஜீயார் இல்லாத
தமிழகம் இன்றும் வெறுமையாக இருக்கிறது..

பிரபாகரன் என்ற மாமேதையின் அழிப்புக்கு
உறுதுணையாக-எதிர்ப்பார்த்துக் கருணாநிதி என்ற
காசுமேடு ஈழப்பிரச்சினையில்
கதைவசனம் எழுதியது.

தமிழகம் கொந்தளித்தும்
அமிழச்செய்தது கருணாநிதி-காங்கிரஸ்
கொத்தளம்..

அழுதான்..அழுதான்..
உலகம் முழுவதும் தமிழன் அழுதான்..

தீபமும் மெழுகும் உருக்கிய தீபங்களில்
தேசமெங்கும் தமிழன் கண்ணீர் கரைபுரண்டுகொண்டது..

கருகிய தமிழன் உடலங்களுக்காய்
கறுப்பு உடையில் கதறினான் தமிழன்..
தாயர் அழுதுபுரண்டனர்..

மார்பில் அடித்து மயங்கினார்கள்..

ரொறன்ரோ நகரத்து அடுக்கிய
மாடிகளின் நடுவேயான
அகண்ட தெருக்களில் தமிழன்
மெழுகுவர்த்திகளோடு இலட்சமாக
நடந்தபோது, கதறியழுத தமிழினத்தின்
காட்சிகளை கனடிய மனிதங்கள்
கணக்கில் எழுதின..

எங்கள் உறவுகளே..

ஈழமண்ணில் சாம்பல் ஆகிய
சொந்தங்களே..

கருவில் உதிர்ந்த
காலைப் பிஞ்சுகளே..

கற்பில் வதங்கிய
கன்னிச் சுடர்களே..

காடை அரசால்
சிதறிய தோடை நிலமே..

அழுகின்றோம்..
அழுகின்றோம்..

உருளுகின்ற துளிகளாய்
எங்கள் விழிகள்
உங்களுக்காக..

எட்டப்பம் இறைச்சியும் தண்ணியும்
அடித்து இராசபக்சா வெற்றியை
இங்கே கொண்டாடினார்கள்

கெட்டவர்கள் இன்று வெல்லலாம்..

ஆனால் நாளை வெல்லமுடியாது..

பிரபாகரம் அழியவில்லை..

அழியாது..!

அது செங்குருதியாக்கப்பட்ட
தமிழனின் உயிர்..

ஈழத்தில் புலிகளாய் இறந்தவர்களே..

நீங்கள்..
உலகத்தமிழனைப் புலிகளாய்ப்
பிறக்க வைத்தீர்கள்..

உங்கள் சாம்பல்களில் உலகத்தமிழன்
தேம்பி அழுகின்றான் ..

உண்மை..

ஆனால் ஓம்பிய விடியல்
உயிர்கொண்டிருக்கிறது..

இந்தநேரம் மட்டும் உங்களுக்காக
எங்கள் விழிகள்..


உங்கள் சாம்பல்களிலும்
உயிர்களிலும்
இது எங்கள் சத்தியம்..

இன்னும் எழுவோம்..
இனியும் எழுவோம்..
-புதியபாரதி.

No comments:

Post a Comment