Saturday, May 9, 2009

தமிழா உன்வாக்கில்


தமிழா உன்வாக்கில்
தமிழீழம் இருக்கிறது!

அம்மாதான் வெல்ல வேண்டும்
அகிலத்துத் தமிழர் சென்னை
அம்மாநி லத்தில் ஈழ
அறைகூவல் வெல்ல வேண்டும்
சும்மாவாய்க் குமாரன் செத்தான்
சொல்லுவீர் தமிழ கத்தீர்
கும்மாளக் கூத்தின் றில்லை
கொண்டுவா இனத்தின் வெற்றி!

பணக்குலை கொண்ட மாந்தர்
பலாச்சுளை போலக் காசு
மணத்திடும் தீமூக் காவார்
வந்தனர் சோனி யாத்தாள்
பிணக்குடில் ஆக்கும் லங்காப்
பேயினை வளர்க்கும் போலிக்
கணக்குகள் தோற்க வைப்பீர்
காலத்தின் பணியீ தென்பேன்!

சீமான்பா ரதிரா சன்பேர்
செறிகடல் வைக்கோ தாசன்
கோமான்கள் ஈழ மார்பர்
கொண்டதோர் அணியே இன்று
நாமாளும் இனத்தின் வெற்றி
நாயக இருப்பே காட்டும்
ஆமாநீ அளிக்கும் வாக்கே
அளவிலாத் துயரம் போக்கும்!

இப்படிக் கூத்து ஒன்றை
இந்தியம் தந்த தேனோ?
செப்படிச் சோனி யாக்கள்
செத்திடும் ஈழக் காட்டை
எப்படி இயக்கு கின்றார்
இரசாய னங்கள் போடும்
மப்படி மகிந்தன் கோட்டை
வளர்க்கிறார் தமிழா பாராய்!

வெற்றியாய் ஈழம் வைப்பீர்
வேதனை போக வைப்பீர்
முற்றிலும் தமிழ மண்ணின்
முகத்தினைப் பற்றி நிற்பீர்
குற்றமாய் நிற்போ ரெல்லாம்
கொடியேற்ற விட்டால் எங்கள்
சுற்றமெல் லாமும் போகும்
சுதந்திர வாக்க ளிப்பீர்!
-புதியபாரதி

No comments:

Post a Comment