Friday, May 1, 2009

தங்க முகுந்தா..


தங்க முகுந்தா..

சிங்கமுலாம் பூசிச்
சிந்திக்கின்றாய்..

கொஞ்சம் சிங்களத்திடமே செல்..

பாதுகாப்பு வலயமெல்லாம்..
பாதுகாப்பு வலயம் இல்லையென்று
அய்நா சொல்கிறதே..

உன்பொய்நா எதையோ பேசுகிறதே..

கிளிநொச்சி செல்ல வேண்டுமென்று கேட்ட
மிலிபாண்ட் கிலிகொண்ட சிங்களத்தையே
பார்த்து வந்தார்..

தலைமயிரை அறுத்து
தங்கையரின்மேல் வதையுறவு
செய்கிறானே..
வரும்செய்தி தெரியாதா?

நம்பியல்லவா சிங்களத்திடம் வந்தார்கள்..
அகதி முகாம்களில் இருந்து
கும்பிடக் கும்பிட எத்தனை நூறு நூறாய்
இழுத்துச் செல்லப்பட்டார்கள்..

சிங்க மலத்தைச்
சிரசெல்லாம் பூசுபவர்கள்.. பற்றி
என்ன நினைக்கிறாய்..

கருணாவையும், டக்ளஸ் கூட்டத்தாலும்
அரச ஏதுக்களாலும் கடந்த வருடம்..
ஏழாயிரவர் இறந்தார்கள் என்று
இன்று வந்த அமெரிக்கத் தகவல் கூறுகிறதே..

அறிவாயா?

அய்நா மடியில் தமிழன் பிரச்சினை
எப்படிச் சென்றது..?

சிங்கக் கொடுமை அல்;லவா?

போரும் சீரழிவும் எங்கே இருந்து வருகிறது..?
வேரும் உறவும் இல்லாதவனுக்கு என்சொற்களின்
வேதம் புரியாது வேடனே..

-எல்லாளன்.

No comments:

Post a Comment