Monday, May 11, 2009

என்னினிய தமிழகமே..!




என்ன சொல்லப் போகிறாய்
என்னினிய தமிழகமே
அன்னைமடி கருகுதே
ஆயிரமாய் மடியுதே.. என்ன..சொல்லப்

பின்னலிலே சோனியா
பின்னால் இருக்கிறளே
முன்னை இருந்தரக்கன்
மகிந்தன்கை பிடிக்கிறளே! என்ன சொல்லப்

கைகால்கள் இல்லையடா
கனிப்பிஞ்சு சிதறுதடா
பொய்கூறும் சிங்களத்தின்
பேய்க்கூடு சிரிக்குதடா! -என்ன சொல்லப்

தமிழகமே நீஎழுந்தால்
தாரணியே வெடிக்குமடா
உமிகளாய் ஈழமக்கள்
உயிர்ச்சிதறல் நிற்குமடா! -என்ன சொல்லப்

கட்டபொம்மன் தாய்நிலமே
கரிகாலன் வாழ்நிலமே
கெட்டவர்கள் கொலைவெறியில்
குதித்தெழடா தமிழகமே! -என்ன சொல்லப்
இன்றுனது கைகளிலே
இருக்குதடா பொன்வாக்கு
ஈழமண் விடுதலைக்காய்
எழுந்திடட்டும் உன்நாக்கு! -என்ன சொல்லப்
-புதியபாரதி

1 comment: