Friday, July 31, 2009

உதித்தவேர் சாகாது..!




இது இருபத்தியோராம் நூற்றாண்டு.

இராட்சதர்கள் இல்லாத இந்த நூற்றாண்டில்
இராசபக்ச வந்து ஈழத்தில் விழுந்தான்..!

கூனி இல்லாக் குறையைச்
சோனியா நிரப்பினாள்..

துச்சாதனர்கள் கூட்டங்கள்
சிதம்பரம், சோ, இந்து ராம், என்றவாறு..
குதங்களாய் விரிந்தன..

சகுனிக்காக வந்து முழுநரியாகினான் மூத்த
கருணாநிதி..

எட்டப்பன், காக்கை இல்லாக் குறையை
டக்ளஸ், கருணாவால் நிரம்பியது
களச்சரிதம்..!

மூட்டைப் பூச்சி என்று
வீட்டைக் கொழுத்திய இந்த
வீரவாகுகள் எழுதிய சரித்திரம் இந்த
நூற்றாண்டின் இரத்தப்பழி..

புதிய இட்லருக்குத் தீனிபோட்டன இந்த
அநியாயங்கள்..

பச்சைப்பசேல் நிலங்களை
இச்சைப்படியே எரித்தார்கள்..

ஈழத்தை முற்று முழுதாக எரித்தாவது
ஒரு தமிழினத்தின் எழுச்சியை
முடிக்கத் துடித்தவர்கள் இவர்கள்..

முல்லைப் போரில் பல்லாயிரம் மக்களை
ஒருசேரக் கொன்று குவிக்க, இந்திய
புலனாய்வுத்துறை அதிகாரிகள்
ஐம்பதுபேர் வவுனியாவில்
அடுக்காக நின்றகதை இப்பொழுது
ஆலாபரணம் எடுக்கிறது..!

சீனா, பாகிஸ்தான், உருசியா, இந்தியா..
புடுங்கப்பாடுகள் எல்லாம் மலங்கக் கிடத்திவிட்டு
ஈனக்கழிவுகளாய் இறங்கிக்கொண்டன..

இளைய யுவதிகளை இழுத்துக்
குடித்தன இராசபக்சன் படைகள்..

போருக்கு முந்தியும் பிந்தியும்
நாளுக்குநாள் மறையும்
நம்மவர்கள்..

போர் முடிந்தாலும் கடத்தல்
முடியவில்லை..

ஆணாகவும் பெண்ணாகவும்
காணாமல் முடிக்கின்றன
கறுத்தப் பூனைகள்..

போர் முடிந்துவிட்டதாகப்
போப்பாண்டவர்வரைக்கும் சொல்லியது
இந்தச் சிங்கள தேசம்..

ஆனாலும் இன்னமும் மீன்பிடித்தடை..

நல்லூரான் வேளையிலும்
மல்லுக்கு நிற்கிறது ஊரடங்கு..

மூன்று இலட்சம் மக்கள் முகாமுக்குள்
பட்டினி..

கொழும்பில் பூஞ்சணவனோடு
வணங்காமண் பொருட்கள்..

இந்த நேரத்திலாவது
ம(கி)ந்தபுத்தி மாறவில்லை..

நல்லகாரியம் செய்ய இந்தச்
செல்லரித்தவனுக்குச் சிரசு விடவில்லை..

தமிழனைக் கையேந்த வைக்கும்
எழியவனாகவே..இவனும், இந்த நாடுகளும்..
இலங்காவும்..

இராசபக்சவுக்கு இந்தியாவின்
எத்தனை எத்தனை வளைகாப்புகள்..

நரகாசுரனுக்கு அய்நா மன்றத்தில்
ஆபத்தைத் தடுத்தது முதல்
ஆதரவுக் கடன்களுக்கு
அகிலத்தை வரித்தது இந்தியா..

சிரட்டை எடுத்துக் கூனிக்குறுகும்
ஒரேஒரு மாநிலம் தமிழ்நாடு..

ஈழம் பிறந்தால் தமிழனுக்கு மானம்
பிறக்கும் என்ற காரணத்தால்
மலையாள ம(h)ந்திரிகளால்
ஈழமண்ணை எரித்து தமிழகம்
அமிழப் புதைக்கப்பட்டது..

எல்லாமும் ஏன்?

வீரம்செறிந்த தமிழினம்
வீழ்த்தப்பட விரும்பியது இந்தியம்..

இன்னொரு இசப்பான்..இன்னொரு இசுரேல்..
இன்னொரு வல்லரசு இனிமேலுமா..

பிரபாகரனுக்குப் பயந்தது
பேய்பிடித்த உலகம்..

சாதிகளில்லாச் சமுதாயம்..
பிணக்குகள் இல்லாப் பேராட்சி..
கலையும், பண்பாடும் கண்காட்சிகள்..
சுத்தத் தமிழில் மனிதப்பெயரும்
வணிகப் பெயருமாய்...
அற்புத உலகத்தை எப்படி இவனால்
சமைக்க முடிந்தது..

உயிரைக்கொடு என்றால்
பயிர்களும் அல்லவா படை
சமைக்கின்றன..

கரும்புலிக்கு விரும்பியவாறு
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இந்தக்
கண்மணிகள்..

ஓ..இந்தச் சமுதாயம்..
கரிகாலன் மட்டுமே கருத்தரிக்க முடியும்..

எரிக்க நினைத்தார்கள்..

இருபது நாடுகள் கைகோர்த்தன..

பாகிஸ்தான் விமானிகளுக்கு அம்பாந்தோட்டையில்
காணிகள் கொடுக்கப்பட்டன..

சிறிலங்காக் கடவுச்சீட்டுகள்
இவர்களுக்கு..

இந்த விமானிகளை சிறீலங்காவின்
சொந்தமாக்கினான்.. இராசபக்ச..

ஈழத்தை எரித்து வேழத்தைப் புதைத்தது
இந்தக் கேடுகெட்ட உலகம்..

ஈழம் சாகுமா?

இசுரேல் செத்ததில்லை..

வியட்னாம் விழுந்ததில்லை..

கிட்லர்தான் செத்தான்..

யூதன்வேர் முடிந்ததா?

ஈழம் ஒருநாள் எடுத்தவேர் தளைக்கும்..

இலட்சமாய் முடிந்தோம்..ஆனாலும்
இலட்சியம் சாகாது...!

-எல்லாளன்..

No comments:

Post a Comment