Friday, June 5, 2009

அய்நா மண்குதிரை


புலிவெண்பா..!
இந்தியக் கொடுமையும்..
அய்நா மண்குதிரையும்..


அய்நாவின் வஞ்சிப்பு
வக்கில்லா அய்நாவும் வஞ்சித்து விட்டதென
இக்கணத்தில் ஊடகங்கள் ஏடுஇட்டார்-துக்களமாய்
ஆயிர மாயிரமாய் அள்ளுமக்கள் தானிறக்கும்
பேயிறங்கப் பார்த்திருந்தார் பித்தர்!

அய்நா ஒரு மண்குதிரை
மண்குதிரை நம்பி மறிகடலை நீந்திவரக்
கொண்டுலகம் பார்ப்பதுவும் கேடாமே-குண்டுகளால்
பிய்த்தெறிந்த சாக்கிடங்கைப் பேசாமற் பார்த்திருந்த
அய்நாவால் என்னபயன் ஆர்!

சதீஷ் நம்பியாரும் விஜய் நம்பியாரும்..
தம்பியாம் நம்பியார் தக்கனுக்கும் தானவனின்
நம்பியார் அண்ணனோ நாயகர்க்கும்-கக்கமிட்டு
ஆலோச னைசொல்லும் அச்சு மலையாளிச்
சாலோச னைக்குண்டோ சாறு!

சரணடையச் சொல்லி சாக்கொடுத்த சதி..
வெள்ளைக் கொடியுடனே வேளைவா என்றபின்னே
கொள்ளிப்பேய் சுட்டுவைத்த கேடுஎன்ன-குள்ளர்
தெரிந்தும் அய்நாவைக் கேட்டபின்னே சென்றோர்
சரிந்ததுவும் நம்பிச் சதி!

கண்டியிலே பேசிவந்தும் காணாத பான்கீமூன்..
அய்நாச் செயல்மூனார் அக்கிரமம் சொல்லாமல்
பொய்நாவாய் நின்றிலங்கா போய்வந்தார்-மெய்நாவாய்
நின்றுலகம் செய்தல் நிகழுலகம் வைக்காமல்
மன்று எதற்கோதான் மன்!

ரைம்தாள் புரிந்த தர்மம்..

திரைம்ஸ்தாள் மானிடத்தின் தேடல் நடத்தி
உரைத்தார் இலங்காப்பேய் உண்மை -வரைந்தார்
இனத்தமிழர் வன்பதைப்பு ஏடெடுத்துக் காட்டி
மனத்தளவில் வென்றார் மனிதம்!

இனத்தைக் கொன்றபின்னும்..
இந்தியா எம்சாவுக்காய்..

பல்லாயிர மாய்மக்கள் பட்டழித்த பின்னாலும்
கொல்லாதி ருக்கக் கொள்ளவில்லை-சொல்லுறுத்தி
இந்தியா மூர்க்கம் இருந்தய்நா மன்றத்தில்
செந்தமிழர்க் கின்னலிட்டார் சொல்!

இந்தியாவின் சதியில் தென்னாபிரிக்கா..
எங்களுக் காக இருந்ததென் னாபிரிக்கா
சிங்களத்திற் காகவெனச் சேர்ந்தளித்தார்-முங்குளித்து
இந்தியா செய்த இயமப்பி ரச்சாரம்
உந்துபழி யாச்சேர் உலகு!

பக்கமிருந்த பன்னிரண்டு நாடுகள்..பன்னிரண்டு நாடுகளாய்ப் பக்க மிருந்துலவி
இன்றிலங்காப் போர்க்குற்றம் என்றுரைத்தார்-இன்கனடா
அய்ரோப்பா ஒன்றியம் ஆர்பிரித் தானியா
மெய்யுரைத்தார் எங்கதுயர் மேவி!

எமக்கு இந்தியா செய்தபழி
என்றும் அழியாது..

பாழ்பட்ட இந்திப் படுபாவிச் சோனியர்கள்
ஊழ்பட்டுப் போக எமையழித்தார்-ஊழ்வாய்
உருச்சியா சீனாவும் உக்குபா கிஸ்தானீர்
இரச்சாய னம்கொடுத்த எத்தர்!
-சோலைக்குயில்.

No comments:

Post a Comment