Friday, April 17, 2009

அறத்தின் வெற்றி!




செந்தணல் ஏந்தி சுதந்திரம் எண்ணி
செங்களம் வந்தனை புலியே
சுகக்களம் எதுவும் சுகந்தமாய் வார்த்துச்
சுயநலம் கண்டிலாய் புலியே
சிந்துகள் பாடிச் செறிபகை ஊர்ந்து
சிந்தினை தற்கொடை புலியே
சுழலிடும் பூமிச் சுற்றிலும் தமிழர்
சொந்தமாய் நின்றனை புலியே
வந்தனர் கொடியர் வல்லரக் கங்கள்
மகிந்தனைப் பிணைத்தனர் எனினும்
வன்மையெம் எதிரி வகைதொகை இன்றி
மடித்தனன் மக்களை ஆயின்
இந்தவோர் பொழுதும் ஏந்திய நாட்கள்
இன்றுனக் கானது யுகமே
எங்களின் தேச எழிற்கொடி அசைந்து
எங்கெலாம் பறக்குது புலியே!

எத்தனை வருடம் எத்தனை அரசு
எல்லமும் வென்றனை புலியே!
வெள்ளையர் நாடும் வீறிடும் அய்நா
வீதியெல் லாமதும் விளைந்தார்
எங்களின் மாந்தர் இன்றிடும் புயலே
இனப்படு கொலையதைப் பகர்ந்தார்
உள்ளமும் பற்றி உறவுகள் பற்றி
உயர்ந்தனர் தமிழகத் தோரே
உதிரங்கள் மாயும் உண்மைகள் காட்டி
உண்ணாதி ருக்கிறார் தாயர்
குள்ளம கிந்தன் குவலயம் முழுதும்
குதர்க்கமாய் பொய்யுரை தந்தான்
கொடுமையைக் கண்டு கொதித்தது உலகம்
கொடுத்தமுற் தடையினால் நொந்தார்
தௌ;ளிய தலைவன் செறிகளம் காணும்
சிறப்பினில் நின்றதெம் நிலமே
தியாகமாய்த் தலைவன் துருவிய வேட்கை
தேசெலாம் வென்றது அறமே!
-புதியபாரதி

1 comment:

  1. மலையாளிகல் தமிழனின் எதிரிகள்....
    எதற்கு இன்னுமொரு மலையாளி?

    ReplyDelete