Tuesday, April 14, 2009

நோன்பிருக்கும் தமிழர்களே

நோன்பிருக்கும் தமிழர்களே
உங்கள் பாதாரவிந்தங்களில்..


உண்ணா விரதம் இருந்தே உலகை
உசுப்பும் தமிழா வணங்குகிறோம்..எங்கும் -உண்ணா

கண்ணாய் எமது கனிநிலம் சிதறும்
காட்சியைத் தந்தீர் கலங்குகிறோம்.. ஐயா... –உண்ணா

எழுபத்தி நான்கு வயதிலும் சாயி
அண்ணா இருக்கான் பாருங்களே..இன்னும்
இருபத்துக் கொண்ட வயதிலும் நோன்பில்
இறக்கத் துணிந்தார் இளைஞர்களே..!இங்கே -உண்ணா

மனிதமே இல்லா மகிந்தன் அரக்கன்
வடிவமாய் அழித்த வாதைதந்தீர்-எந்தப்
புனிதமும் இல்லான் பொறுக்கும் சதையில்
புரிந்த கொடுமைக் காதைதந்தீர்..நீர் -உண்ணா

உடல்கள் சிதற உயிர்மண் அலற
உடன்பிறப் புக்கள் பிரிகின்றார்-இந்தக்
கடல்கடந் தும்நாம் காண்பதோ என்றே
காருல கெல்லாம் நோன்பிருந்தீர்..அம்மா -உண்ணா

(இசையமைத்து எங்கள் ஆருயிர் உடன்பிறப்புக்களின்
பாதங்களில் அர்ச்சனை செய்யுங்கள்)
-புதியபாரதி

1 comment:

  1. கொச்சைப்படுத்திய போராட்டம் கோலோச்சும் காலம்! யாரிடம் சொல்லியழ!!

    ReplyDelete