Thursday, April 30, 2009

பரமேஸ்வரா..


உண்ணாது மண்ணை
உயிரோடு எழுதும் பரமேஸ்வரா..

சுப்பிரமணியன் பெற்றெடுத்த சுந்தரனே..!

உன்னை எனக்கு அல்ல.. அல்ல..
எமக்குத் தெரிகிறது..

ஒரு திலீபனாக..

ஒரு பூபதி அன்னையாக..

காந்தியத்தை வாந்தியெடுத்த
காந்தி குடும்பம் காணாத கர்மவீரன் நீ..

சென்னியில் இருந்து வன்னியைக் காட்டும்
உனது உயிரின் வரைபடத்தை
இப்பொழுது உலகம் பார்க்கிறது..

உனது முகத்தின் ஒளி இன்னமும் இருக்கும்..
அந்த இருபத்தி நான்காவது நாள் இது..

சீனாவின் வீட்டோவினால் அய்நாவில்
உன்சரித்திரம் அடங்கிவிட்டது..

உனது மக்களைக் கொன்று புதைக்கும்
சிங்களக் கூடாரத்தை இந்த
உலகிற்குக் காட்டுகிறாய் நீ..

குன்றாய் விரியும் சடலக் குவியல்
இன்றும் வருகிறது..

ஆழக்கடலில் நீளம் புதைந்த
சிங்களக் காட்டுமிராண்டிகள்..
பிராண்டி எடுக்கும் பேய்களாய்..

சோனியா தன்பிள்ளைகளுக்குக்
கூனியாய் எழுதும் கதையில்
வாழ்நாள் முழுதும் பழியைச் சுமக்கும்
பரதேசி ஆகிறாள்..

கழிஞன் கதையாய் கருணாநிதியின்
கபட நாடகங்கள்..

உலகம் இன்னமும் உன் உயிரின்
விலையை உணரவில்லை..

உன்னை எமக்குத் தெரிகிறது..

இந்த வரலாறு உன்னை
இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும்..

நீயொரு பிரபா மண்ணின்
பிம்பம்..

உன் பாதார விந்தங்களில்
பாப்புனைகிறோம்..

நாளைமட்டும் அல்ல
இன்றும் உனதே..
-புதியபாரதி

No comments:

Post a Comment