
எங்களின் கூடுகள் இடிந்து நொருங்கின
எங்களின் குருதிகள் நிலத்தில் இறைத்தன
சிங்களச் செருக்கன் தீக்கிரை யாக்கினன்
எங்குமே ஓலமாய் இறக்க முடித்தனன்
தங்கும டங்களாய் தரணி இருக்கவோ?
பொங்கும னங்களே பூட்டிக் கிடக்குமோ?
இங்குபே ரிந்தியம் ஈழம் துடைக்குதே
சங்கிடும் தமிழகம் தாழ்ந்து கிடப்பதோ?
எங்குநீ என்னின ஈழ மைந்தனே
எங்குநீ தமிழகத் தீர இளைஞனே
கங்கையில் குளிக்கவா காலம் எடுக்கின்றாய்
நொங்கென அறுபடும் நிலத்தை மறக்கின்றாய்
எங்குநீ எங்குநீ இதயத் தமிழனே
எங்களின் மாந்தரே இதயம் துடித்துவா
சிங்களம் சோனியா சேர்ந்த அறுவடை
இங்குநீ பார்ப்பதா இன்றே எழுந்துவா!
-புதியபாரதி
No comments:
Post a Comment