Sunday, May 31, 2009

வன்னிப் போர்ப்படலம்



புலிவெண்பா!
வன்னிப் போர்ப்படலம்



இராட்சதன் வந்தான்!

புலிவெண்பாப் போர்ப்பரணி புத்தகமாய் யாக்கிச்
சிலைசெய்த தாற்போலும் செய்தேன்-மலைபோலே
நிற்கின்ற வேளை நிலமே குருதிவிழப்
பற்பிளந்து வந்தானே பக்சன்!

குழந்தைகளைக் கொன்று குவித்த இனவழிப்பு!

இராட்சதனாய்ப் பண்டை இசக்கதைகள் போலே
இராசபக்ச வந்தான்காண் இன்று-கசக்கூறாய்க்
குஞ்சும் குருமானும் கொன்று சவக்காடாய்ப்
பஞ்சுநிலம் தீயிட்டான் பார்!

மோடனுக்குத் தீகொடுத்த சோனியா!

இந்தியத்துச் சோனியா ஈழத் தமிழர்களை
முந்தி யழித்திடவே மோடன்கை-மந்திரமாய்க்
கந்தகத்தைக் காட்டிக் கடிவாள மிட்டாளே
சந்ததியே வெந்ததடா சாற்று!

மந்திக்கை மாலையென மாண்டார் தமிழர்
தீக்குளித்தான் முத்துகுமார் தேசமெங்கும் எம்முறவு
ஆக்குவித்த செந்தணலும் ஆராரே-நாக்குளித்த
இந்தியத்துச் சோரம் இருந்தமிழர் தாயகத்தை
மந்திப்பூ வாக்கியதே வார்!

ஆயிரமாயிராய் அழிந்த சிறுவர்!
ஆயிரமாய்க் குஞ்சு அழகுச் சிறுமழலைத்
தாயரொடு தந்தையும் தான்செத்தார்-பேயரக்கன்
நாலுதிசை யூடேயும் நாசகுண்டு வீசியதால்
சாலுழக்கு எல்லாமும் சா!

மரங்களிலெல்லாம் சதைச்சிதறல்
மண்கிடங்கு எல்லாமும் மக்கள் பதுங்குகுழிக்
கண்மருங்கல் எல்லாமும் கஞ்சலென-விண்சிதறி
வார்மரங்கள் கூடு வழிப்பாதை யாமெங்கும்
ஊர்சிதறக் குண்டெறிந்தார் ஊர்!

கழிவாகி நின்ற கருணாநிதி
கருணா நிதியாரும் காட்டாப்புக் காட்டி
முருக்காகி நின்றதுதான் மிச்சம்-பெருக்கோடிச்
சேர்ந்தொருகால் தில்லியிலே சேர்ந்தார் பதவிக்காய்
ஊர்ந்தார் எமக்கில்லை ஓர்!

இராசயனக் குண்டுகள் nகாடுத்த காந்தி குடும்பம்
விண்ணளந்த ஓலங்கள் வீடில்லை ஊனில்லை
தண்ணீர் பருக்கின்றிச் சாவெடில்கள்-கண்ணிழந்த
போதியாப் போலே பொழிய விசக்குண்டைக்
ஊதிக்கொ டுத்ததடா இந்தி!

பிரபாகரன் பெருமையைப் பிடிக்காத இருவர்
மத்தியிலே சோனியாள் மாநிலத்தே தீமூக்கா
செத்தீழம் போகவெனச் செய்தாரே-புத்துலகம்
போற்றும் பிரபாப் பெருந்தலைவன் கொன்றுவிட
ஏற்றிவர்கள் தான்நடந்தார் ஏர்

சோனியா குடும்பத்தைச் சூழ்ந்தபழி சாகாது
இந்த வரலாற்றை இந்தியமே தான்நடத்தி
சிந்துரத்த மாக்கியதே சொல்லாயோ?-அந்தகராய்க்
கொன்றொழித்த காதைக்குக் கூனியாய்ச் சோனியா
நின்றழித்தார் என்றபழி நீளும்!

-சோலைக்குயில்

Saturday, May 23, 2009

அழுகின்றோம்..


அழுகின்றோம்..
ஆனாலும்..
எழுகின்றோம்...!


இருபத்தியோராம் நூற்றாண்டு
இராசபக்சா என்ற கொடியோனின்
தமிழன் இனவழிப்பால்
இரத்தவெடில் பூசி;க்கொண்டது..

இந்திய-இலங்கைக் கூட்டில்
சகுனிகளும் கூனிகளும்
மகுடிகளாக்கப்பட, ஈழ மக்களின்
மனித அவலம்-மரண ஓலம்
பூகோளக் கோடுகள் எங்கும் இரத்தமயமானது..

பொன்மனச் செம்மல் எம்ஜீயார் இல்லாத
தமிழகம் இன்றும் வெறுமையாக இருக்கிறது..

பிரபாகரன் என்ற மாமேதையின் அழிப்புக்கு
உறுதுணையாக-எதிர்ப்பார்த்துக் கருணாநிதி என்ற
காசுமேடு ஈழப்பிரச்சினையில்
கதைவசனம் எழுதியது.

தமிழகம் கொந்தளித்தும்
அமிழச்செய்தது கருணாநிதி-காங்கிரஸ்
கொத்தளம்..

அழுதான்..அழுதான்..
உலகம் முழுவதும் தமிழன் அழுதான்..

தீபமும் மெழுகும் உருக்கிய தீபங்களில்
தேசமெங்கும் தமிழன் கண்ணீர் கரைபுரண்டுகொண்டது..

கருகிய தமிழன் உடலங்களுக்காய்
கறுப்பு உடையில் கதறினான் தமிழன்..
தாயர் அழுதுபுரண்டனர்..

மார்பில் அடித்து மயங்கினார்கள்..

ரொறன்ரோ நகரத்து அடுக்கிய
மாடிகளின் நடுவேயான
அகண்ட தெருக்களில் தமிழன்
மெழுகுவர்த்திகளோடு இலட்சமாக
நடந்தபோது, கதறியழுத தமிழினத்தின்
காட்சிகளை கனடிய மனிதங்கள்
கணக்கில் எழுதின..

எங்கள் உறவுகளே..

ஈழமண்ணில் சாம்பல் ஆகிய
சொந்தங்களே..

கருவில் உதிர்ந்த
காலைப் பிஞ்சுகளே..

கற்பில் வதங்கிய
கன்னிச் சுடர்களே..

காடை அரசால்
சிதறிய தோடை நிலமே..

அழுகின்றோம்..
அழுகின்றோம்..

உருளுகின்ற துளிகளாய்
எங்கள் விழிகள்
உங்களுக்காக..

எட்டப்பம் இறைச்சியும் தண்ணியும்
அடித்து இராசபக்சா வெற்றியை
இங்கே கொண்டாடினார்கள்

கெட்டவர்கள் இன்று வெல்லலாம்..

ஆனால் நாளை வெல்லமுடியாது..

பிரபாகரம் அழியவில்லை..

அழியாது..!

அது செங்குருதியாக்கப்பட்ட
தமிழனின் உயிர்..

ஈழத்தில் புலிகளாய் இறந்தவர்களே..

நீங்கள்..
உலகத்தமிழனைப் புலிகளாய்ப்
பிறக்க வைத்தீர்கள்..

உங்கள் சாம்பல்களில் உலகத்தமிழன்
தேம்பி அழுகின்றான் ..

உண்மை..

ஆனால் ஓம்பிய விடியல்
உயிர்கொண்டிருக்கிறது..

இந்தநேரம் மட்டும் உங்களுக்காக
எங்கள் விழிகள்..


உங்கள் சாம்பல்களிலும்
உயிர்களிலும்
இது எங்கள் சத்தியம்..

இன்னும் எழுவோம்..
இனியும் எழுவோம்..
-புதியபாரதி.

Friday, May 15, 2009

தமிழா எழுவாய்!


கொத்துகொத்தாய் விழுகிறதே என்னினமே
செத்துமடி கின்றதடா எம்நிலமே
யுத்தவெடில் இராசபக்சா கேட்கிலனே
மொத்தமென தமிழினத்தை அழித்தனனே!

ஊருலகம் சொல்லியென்ன சிதறுவாயன்
யாருரைத்தும் கேட்கவில்லை குதறுவாயன்
பேரலையாய் தமிழனெலாம் பூமிநின்றும்
நீரலையாய் ஒழிந்ததடா நீதியெல்லாம்!

இந்தியத்தாள் கொடுத்தகையே ஈழமண்ணின்
அந்தியத்தை எழுதுகிறாள் சோனியாத்தாள்
வெந்துமடி கின்றதடா தமிழினமே
எந்தைவழி அழிப்பதுவோ அந்நியனே!

உலகமெலாம் ஆர்ப்பரிக்கும் செந்தமிழா
உன்கையில் இருக்குதடா எம்நிலமே
புலமனைத்தும் ஓர்குடிலில் எழுந்திடுவோம்
இராசபக்சாப் போக்கிலியை விரட்டிடுவோம்!
-எல்லாளன்
படம் நன்றி:தமிழ்ஸ்கை

Monday, May 11, 2009

என்னினிய தமிழகமே..!




என்ன சொல்லப் போகிறாய்
என்னினிய தமிழகமே
அன்னைமடி கருகுதே
ஆயிரமாய் மடியுதே.. என்ன..சொல்லப்

பின்னலிலே சோனியா
பின்னால் இருக்கிறளே
முன்னை இருந்தரக்கன்
மகிந்தன்கை பிடிக்கிறளே! என்ன சொல்லப்

கைகால்கள் இல்லையடா
கனிப்பிஞ்சு சிதறுதடா
பொய்கூறும் சிங்களத்தின்
பேய்க்கூடு சிரிக்குதடா! -என்ன சொல்லப்

தமிழகமே நீஎழுந்தால்
தாரணியே வெடிக்குமடா
உமிகளாய் ஈழமக்கள்
உயிர்ச்சிதறல் நிற்குமடா! -என்ன சொல்லப்

கட்டபொம்மன் தாய்நிலமே
கரிகாலன் வாழ்நிலமே
கெட்டவர்கள் கொலைவெறியில்
குதித்தெழடா தமிழகமே! -என்ன சொல்லப்
இன்றுனது கைகளிலே
இருக்குதடா பொன்வாக்கு
ஈழமண் விடுதலைக்காய்
எழுந்திடட்டும் உன்நாக்கு! -என்ன சொல்லப்
-புதியபாரதி

Sunday, May 10, 2009

மாதாவே உன்னை


மாதாவே உன்னை எண்ணி!

மாதாவே உன்னை எண்ணி
மனதினில் வழுது கின்றேன்
நீதானே தமிழை எந்தன்
நெஞ்சினில் அளித்தாய் உற்குப்
பூதானம் எதுவும் செய்யேன்
போற்றியுன் முகத்தைக் கோர்த்துப்
பாதானம் மட்டும் யாத்தேன்
பாரினில் நிலைத்தேன் தாயே!

மாதாவே அன்று என்னை
மடியினில் வைத்து நின்ற
போதான போதிற் சிங்கர்
புரிந்திடும் கொலையின் சேற்றை
சூதாளர் கொடுமைப் பேயைச்
சொல்லிநீ தந்தாய் அம்மா
வேதாளம் முருக்கு ஏற
மகிந்தவாய் இன்று கண்டேன்!

வயலிலும் வரப்பும் வாய்க்கால்
வண்ணநெற் தோட்டம் எங்கும்
அயலிலும் கோவில் ஆக்கி
அளித்தனை சுயத்தின் வெற்றி
நியதியின் வாழ்க்கை முற்றும்
நின்றுநீ துயரை வென்றாய்
முயலினைப் போலே பாவாய்
மொழிந்தனன் உனக்கே அம்மா!

மாதாவின் தினத்தில் இந்த
மகனுனை வழுதும் காலைப்
போதாகும் போது விண்ணின்
பெருமலை யாகச் சேரும்
நாதாற்கும் ஒலிப ரப்பில்
நல்லதாய் உன்னை எண்ணிப்
பாதானக் குரலே செய்தேன்
பண்பெனும் பெற்ற தாயே!
-புதியபாரதி

Saturday, May 9, 2009

தமிழா உன்வாக்கில்


தமிழா உன்வாக்கில்
தமிழீழம் இருக்கிறது!

அம்மாதான் வெல்ல வேண்டும்
அகிலத்துத் தமிழர் சென்னை
அம்மாநி லத்தில் ஈழ
அறைகூவல் வெல்ல வேண்டும்
சும்மாவாய்க் குமாரன் செத்தான்
சொல்லுவீர் தமிழ கத்தீர்
கும்மாளக் கூத்தின் றில்லை
கொண்டுவா இனத்தின் வெற்றி!

பணக்குலை கொண்ட மாந்தர்
பலாச்சுளை போலக் காசு
மணத்திடும் தீமூக் காவார்
வந்தனர் சோனி யாத்தாள்
பிணக்குடில் ஆக்கும் லங்காப்
பேயினை வளர்க்கும் போலிக்
கணக்குகள் தோற்க வைப்பீர்
காலத்தின் பணியீ தென்பேன்!

சீமான்பா ரதிரா சன்பேர்
செறிகடல் வைக்கோ தாசன்
கோமான்கள் ஈழ மார்பர்
கொண்டதோர் அணியே இன்று
நாமாளும் இனத்தின் வெற்றி
நாயக இருப்பே காட்டும்
ஆமாநீ அளிக்கும் வாக்கே
அளவிலாத் துயரம் போக்கும்!

இப்படிக் கூத்து ஒன்றை
இந்தியம் தந்த தேனோ?
செப்படிச் சோனி யாக்கள்
செத்திடும் ஈழக் காட்டை
எப்படி இயக்கு கின்றார்
இரசாய னங்கள் போடும்
மப்படி மகிந்தன் கோட்டை
வளர்க்கிறார் தமிழா பாராய்!

வெற்றியாய் ஈழம் வைப்பீர்
வேதனை போக வைப்பீர்
முற்றிலும் தமிழ மண்ணின்
முகத்தினைப் பற்றி நிற்பீர்
குற்றமாய் நிற்போ ரெல்லாம்
கொடியேற்ற விட்டால் எங்கள்
சுற்றமெல் லாமும் போகும்
சுதந்திர வாக்க ளிப்பீர்!
-புதியபாரதி

Wednesday, May 6, 2009

வதையிலும் எழுவோம்!


அன்னையெங்கே தந்தையெங்கே?
அண்ணனெங்கே தங்கையெங்கே?
பிஞ்சுவெங்கே பிள்ளையெங்கே?
பெரியரெங்கே உறவுஎங்கே?

அள்ளிவிழுந் தெரியுதையா!
அக்கினியில் புகையுதையா!
கொள்ளியிடும் சுண்ணமிடும்
குலமெங்கள் கருகுதையா!

கற்பழித்துச் சாகவிடும்
கயவன்படை பாருமையா!
நெற்குவியல் கொடுத்தவர்கள்
நிதம்பசியில் சாகுதையா!

அகதியென்று சென்றவரை
ஆலையென இடிக்கிறானே
துகளுணவுக் கேங்கியெங்கள்
தேசமக்கள் சாகிறானே!

பிள்ளைகளைப் பிரித்தெடுத்து
பேயனெங்கே கொண்டுசென்றான்
வள்ளிகளின் உடலமெல்லாம்
வருகுதையா முகாம்களெல்லாம்!

பிரித்தானிப் படக்கலைஞர்
பெரும்வதையைப் படமெடுத்தார்
நரியிலங்காப் படைக்கலத்தின்
நாசவதை உலகமிட்டார்!

சோனியாவாள் சிங்களத்தை
திருமணம்தான் செய்துவிட்டாள்
கூனியளாய் வந்தபின்னால்
கொட்டுதடா எங்கரத்தம்!

சிங்களமே எரிக்குதடா
சிதறுதேங்காய் ஆக்குதடா
இந்தியமே ஆயுதத்தை
இந்தாவென் றளிக்குதடா!

பத்துதரம் அய்நாவில்
தைமூரை யுதைத்தபின்னும்
செத்துவிழுந் தாபோச்சு
சுதந்திரத்தை எடுக்கலையா?

கொத்துதுன்பம் இறைத்தாலும்
குருதிவிழுந் திறைத்தாலும்
செத்துவிழா தீழமடா
சுதந்திரத்தை எழுதுமடா!
-புதியபாரதி


அழுகின்றாய் என்னினமே
அகிலமெலாம் அழுகின்றோம்
விழுகின்றாய் என்னினமே
வீதியிங்கும் நாம்விழுந்தோம்!

வித்துடல்கள் சுமந்தவெங்கள்
வேர்மண்ணை விடமாட்டோம்
எத்தனைதாய் இடர்வரினும்
ஈழமண்ணை மீட்டிடுவோம்!

-புதியபாரதி

Monday, May 4, 2009

காலத்தின் வீச்சாய்



காலத்தின் வீச்சாய்
கனிந்தனை அம்மா வாழ்க!


வாழிய தலைவி அம்மா
வாழிய ஜெயல லிதா
வாழிய அறத்தின் கீற்றே
வாழிய குரலின் வீச்சே
வாழிய ஈழ மண்ணின்
வரமிடும் கால ஊற்றே
வாழிய வாழி என்றே
வாழ்த்துகின் றோமே வாழி!

நேற்றெலாம் எங்கே என்ன
நிகழ்விலே இருந்தால் என்ன?
காற்றிலுன் குரல்கள் மாறிக்
காலமே பகைத்தால் என்ன?
போற்றிடும் மாந்தர் பின்னாள்
போகநீர் கண்டால் என்ன?
நாற்றினை ஈழ மென்றே
நட்டதே போதும் அம்மா?

பொன்மனச் செம்மல் வாக்குப்
பொதிந்தவுன் குரலின் நோக்கு
சொன்னதைச் செய்யும் உந்தன்
சீரிய கொள்கை நாக்கு
மன்னிய உலக முற்றும்
வந்ததே தமிழன் மன்றில்
கன்னலாய் அமுதத் தேனாய்க்
கனிந்ததே வாழ்த்து கின்றோம்.!

அன்னைமண் சிதறு கின்ற
அலறுவாய் ஓலம் கேட்டும்
சின்னபிஞ் சிறுவர் வாலைச்
சேயிழைத் தாயர் தந்தை
பன்னமாய்ச் சதையின் துண்டாய்ப்
பகைவனால் அழிக்கும் போதில்
சன்னமாய் எழுந்த உந்தன்
சரித்திரக் குரலே கண்டோம்!

ஆயிரம் கதைகள் கோடி
அரும்கவி இயற்றி வண்ணப்
பாயிரம் பரணி பாடிப்
பார்ப்புலம் வரித்தால் என்ன?
தாயினைப் போலே வந்த
தங்கமே நிகரே இல்லாய்!
கோயிலாய்த் தமிழாய்க் குன்றாய்க்
கொற்றவம் சமைத்தாய் வாழ்க!

-புதியபாரதி

Friday, May 1, 2009

தங்க முகுந்தா..


தங்க முகுந்தா..

சிங்கமுலாம் பூசிச்
சிந்திக்கின்றாய்..

கொஞ்சம் சிங்களத்திடமே செல்..

பாதுகாப்பு வலயமெல்லாம்..
பாதுகாப்பு வலயம் இல்லையென்று
அய்நா சொல்கிறதே..

உன்பொய்நா எதையோ பேசுகிறதே..

கிளிநொச்சி செல்ல வேண்டுமென்று கேட்ட
மிலிபாண்ட் கிலிகொண்ட சிங்களத்தையே
பார்த்து வந்தார்..

தலைமயிரை அறுத்து
தங்கையரின்மேல் வதையுறவு
செய்கிறானே..
வரும்செய்தி தெரியாதா?

நம்பியல்லவா சிங்களத்திடம் வந்தார்கள்..
அகதி முகாம்களில் இருந்து
கும்பிடக் கும்பிட எத்தனை நூறு நூறாய்
இழுத்துச் செல்லப்பட்டார்கள்..

சிங்க மலத்தைச்
சிரசெல்லாம் பூசுபவர்கள்.. பற்றி
என்ன நினைக்கிறாய்..

கருணாவையும், டக்ளஸ் கூட்டத்தாலும்
அரச ஏதுக்களாலும் கடந்த வருடம்..
ஏழாயிரவர் இறந்தார்கள் என்று
இன்று வந்த அமெரிக்கத் தகவல் கூறுகிறதே..

அறிவாயா?

அய்நா மடியில் தமிழன் பிரச்சினை
எப்படிச் சென்றது..?

சிங்கக் கொடுமை அல்;லவா?

போரும் சீரழிவும் எங்கே இருந்து வருகிறது..?
வேரும் உறவும் இல்லாதவனுக்கு என்சொற்களின்
வேதம் புரியாது வேடனே..

-எல்லாளன்.