Thursday, April 9, 2009

கார்நிலம் நோகுதே!


கருணா கண்டு கார்நிலம் நோகுதே!

கிழக்கை உழக்கிய கீழான் கருணா
பழிக்குப் பிறந்த பிள்ளையன் பதரன்
கக்கிய அரவின் நச்சுகள்
திக்கெலாம் அதிரத்; தீயர்வந் தனரே!

திருமலை வர்சாச் சின்னப் பிஞ்சை
உருவிய இவர்களின் ஊத்தைகள் கூட்டம்
வலையில் விழுந்த போதினில்
கொலையில் முடித்துக் கொடியர்தப் பினரே!

அரசியல் தீர்வு அளவெதும் வேண்டாம்
உரசும் தமிழர்க் கொன்றுமே வேண்டாம்
பதின்மூன் றாம்பிரி வுமதுவாய்
எதுவும் ஏனெனக் கேட்கிறான் கருணவே!

நக்கிற நாய்க்குச் செக்கெது வென்றே
குக்கலே அறியுமா குலத்துக் துரோகி
அடுப்படி தன்வால் ஆட்டியே
உடுக்கடிக் கின்றான் உயிர்நிலப் பதரே!

வீரமா மண்ணில் விளைந்ததிப் பதர்கள்
சோரம் போனவர் துத்தலை நாகங்கள்
மட்டு மண்ணும் வருவதோ?
கட்டுக் கரும்புக் கார்நிலம் வேகுதே!
-மட்டுக்கவி

No comments:

Post a Comment