Tuesday, June 2, 2009

இராணுவக் கடைசிநாள்..



இராணுவக் கடைசிநாள்..

கதறக் கதறக் கருக்குலைத்தான் பெண்கள்
உதற உருக்குலைத்தான் உத்தன்-பதறவே
தாய்முன்னே பிஞ்சை தறித்துப் பறித்தெடுத்து
பேய்போலே வற்பிசைந்தான் பேய்!

பத்துபதி னைந்தான பாற்சிறுவர் ஆயிரமாய்
கொத்துவெனப் பல்லோரைக் கொண்டுசென்றான்-புத்தநில
வீடுகளில் வேலைசெய விட்டிருக்கான் பின்னாளில்
பாடுகிற சிங்களனாய்ப் பார்க்க!

தங்கத் தமிழ்மகளிர் தார்க்கூந்தல் கத்தரித்து
பொங்கும் புலியென்று போட்டழித்தான்-சிங்கபடை
கற்பழித்தான் கொன்றான்காண் கண்டதுண்ட மாக்கியவன்
பற்றைகளில் விட்டெறிந்தான் பார்!

நாளையொரு சந்ததியாய் நம்தமிழர் இல்லாமல்
வேளையொரு தந்திரமாய் வேரழித்தான்-கோளை
இனம்படக் கொன்று இசுத்திரியாய் மாறி
வனத்தரக்க ராய்நின்றான் வார்!

கோத்தபாய வென்ற துட்டப ரம்பரையான்
அத்துபடி கற்பழிக்க ஆணையிட்டான்-மூத்திரமாய்
நக்கிக் குடித்து நமதெட்டப் பர்களெலாம்
பக்கமெனச் சிங்களத்தே பார்!

இருந்தபோதும் காட்டி இடம்பெயர்ந்தான் அந்தக்
கருணாவெட் டப்பன்தான் காணீர்-பெருந்தலைவன்
வார்சடலம் ஈதென்று மார்தட்டிச் சாவுற்ற
ஓர்சடலம் தானுரைத்தான் ஓர்!

இடக்ளசான் துள்ளி எழுந்தான் மகிந்தன்
அடக்கிவைத்த ஆட்சியிலே ஆள்வான்-மடக்காய்
மடக்கென்று செம்புலியை மார்தட்டிப் பேசி
அடக்கென்றான் அந்நியற்காய் ஆ!

அரசியலார் நடேசன் அகிலத்து ஓர்வால்
கரவெள்ளை காட்டவே கண்டும்-பரதேசிச்
சிங்களத்தான் சுடவேதான் சேர்புலித் தேவனொடு
வெங்களத்திற் செத்தாரே வீரர்!

போர்க்கைதி யாயிருந்த பொல்லார் பெரும்படைஞர்
ஊர்ப்பிள்ளை போலே உவந்தளித்து-ஏரேழ்வர்
பத்திரமாய்ப் போகவிட்ட பண்புலியைக் கொன்றானே
புத்திகெட்ட புத்தபடை போ!

சிங்களத்தில் ஓர்மகனும் சாக விலைகொடுக்காத்
தங்கமென நின்றான் தலைவனே-பொங்குமுளம்
ஆரப் பெருங்குணத்தால் ஆரமுதன் ஆனானே
சூரியப் பொன்மகனார் சொல்!
-சோலைக்குயில்.

No comments:

Post a Comment