Wednesday, June 10, 2009

காட்டிக் கொடுத்தான்..


இருந்து காட்டிக் கொடுத்தவன்
இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

--------------------------------
போரில் நடந்த புலிகளின் தடங்கள்
புத்தகங்களாக மலர்ந்தபோதுதான்..
உலகம் வியப்புக்குள் இறங்கியது..

முறிப்புப்போர், முற்றுகைப்போர், உடைப்புப்போர்,
ஊடறுப்போர் என எண்ணற்ற வகைகள்
போர்ப்பரணிகளாக விரிந்தன..

பல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
பாடப் புத்தகங்கள் ஆகின.

இழப்புகளிலிருந்தும், இறப்புகளிலிருந்தும்
உயிர்த்தெழுந்தது தமிழினம்.

இருப்புக்கும் உரிமைக்குமான அறுபது ஆண்டுகால
இரத்த இறைப்பு தமிழன் இனத்தின்
தார்மீகத்திற்கானது.

மகிந்த சிந்தனை என்ற மதத்த சிந்தனை
தமிழன் மரணத்திற்காகவே எழுதப்பட்டது.

மண்ணின் அபகரிப்புக்காகவே தமிழனுக்கு
மரணம்படுக்கை கொடுக்கப்படுகிறது.

இராசபக்ச இன்று இராட்சதபக்சவாய்
ஆகிக்கொண்டபோதுதான்
இலட்சம் மக்களின் குருதி
ஆறாய் ஓடியது.

குஞ்சும் குருமானுமாய் தமிழன்
கூட்டி அள்ளப்பட்டான்.

இந்தியக் காந்தி வம்சம்
ஈழத்தமிழனின் இறப்புக்காக
இலங்கைக்கு இறைத்துக் கொடுத்தது.

மேற்குலகம் பார்த்துக் கதைக்க முடிந்ததே ஒழிய
மரண ஓலத்திற்கு ஒரு
மண் அள்ளிப்போடக்கூட முடியவில்லை..

வன்னியில் மரண ஓலம்..
வதைமுகாம்..
கண்டியில் குளுகுளு வெப்பத்தில்
கதைத்துக் கொண்டார் பான்கிமூன்.

எங்களை இறக்க வைத்த இந்தியம்
போர்க்காலக் குற்றங்கள்
போர்த்தப்பட்டிருக்கும் இலங்கவை
காப்பாற்ற நிற்கிறது ..

எங்களுக்கு யார்துணை?

உலகவீதிகளில் நின்று
உரக்கக் கூவினோம். ஆனாலும்
கூட்டி அள்ளிய முள்ளிவாய்க்காலின்
கொடுமையை யார்தான் தடுத்தார்கள்.?

பொங்கி எழுந்த எங்கள்
குரல்கள் பூமிக்கு அடியில்
போடப்பட்டபோதுதான்..
இராசபக்ச எரித்து முடித்தான்.

பாதுகாப்பு வலயமென்று
பாடி அழைத்து
ஊதி எரித்த இந்தக் கொடுமையைப்
பார்த்தபின்னாலும்
அய்யன்னா அமைப்பு
அரச விருந்தாளியாக வந்துபோகிறது..

ஆனாலும்..
தீர்வுகள் மறுக்கப்பட்ட எங்கள்
பூமியில்,

தேச இனம் எரிக்கப்பட
பாச நிலங்களில்..

இனி அந்நியனுக்குப் பாதபூசை
செய்யப் பக்கத்தில் இருக்கின்றன.
பாவ சென்மங்கள்..

இருந்து காட்டிக் கொடுத்தவன்
இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

ஆமாம் எங்கள் கைகளே
எங்களின் ஒத்தடங்கள்..

அய்நா மன்றை
அரங்காய் மாற்றுவோம்

இணையத்தளங்களில் உண்மையை
உரைப்போம்.

இனத்திற்காக எழுந்து நடப்போம்.

அகிலத் தெருக்களில் அறம் எழுதுவோம்.

உலகத் தமிழா உறக்காதே..
உறங்காதே..

எழுந்து நடப்பாய்..
இனமாய் எழுவாய்..
-எல்லாளன்.
நன்றி: தமிழர் தகவல்..

No comments:

Post a Comment