Tuesday, June 30, 2009

மனமும் கனமும்..



இறந்தகதை சொல்லி அல்லது சொல்ல இத்தனை நாட்களா..?

மறக்க முடியாத ஒருவனுக்கு மரண வாய்ப்பாடா?

பெற்ற பிள்ளையைத் தளபதியாக்கிப்
பெற்ற மண்ணுக்குக் கொடுத்த தலைவன்
புராணங்களிலும் உண்டா..?

உலகப் போரியல் வரலாற்றில்
இந்தச் சூரியத் தேவனின் தளபதிகள்போல்
எந்தநாட்டு விடியற்போர் வைத்திருக்கிறது..?

இடுப்பில் இருந்து பிரிந்த கருணா என்ற
கசங்கட்டியால்தான் எட்டப்பத்துக்கூட
இந்த மவுசு..

பழியின் வரலாறுகூட
பாடத்திற்கு வந்திருக்கிறது என்றாலும்..
இரவு வந்துவிட்டால் ஆதவன்
இறந்தா படுவான்..

தேசியத்தை தெரியவைத்தனுக்கு
எதற்குத் தீர்த்தாஞ்சலி..?

பேரியக்கத் தலைவனுக்கு எதற்குப்
புறமுதுகுக் கதைகள்..

பணிக்குப் புறப்பட்டவர்களை
பகலவனுக்கப் பாடை கட்டிக்
காப்பாற்றப் போகிறார்களாம்..

கரும்புலியைத் திரும்பிவா என்று
கரிகாலன் அனுப்பியதில்லை..

திரும்பிவருவேன் என்று எந்தக்
கரும்புலியும் திரிந்தது இல்லை..

சீனம்-பாகிஸ்தான்-இந்தியம் என்ற
ஆனானப்பட்ட வல்லரசுகள்..
ஒரு அடுப்பில் சமைத்தது கிடையாது..

ஆனால் புலிகளைச் சமைக்கப் புறப்பட்டார்கள்..

அட..ஒரு விடுதலைக்கான
அரிச்சுவடிக்கும் சேகுவேரா என்ற
சிறப்பியலாளனுக்கும்..
சுடச்சுட வரிகொடுக்கும் கியூபாவும்..
ஒரு இனப்படுகொலையைத் தெரியவில்லை என்றால்..

ஆம் ..சுயநலங்கள்
சேர்ந்து கொடுத்த இரசாயன
எறி-எரிகுண்டுகள்..
பிச்சையெடுப்பவன் தெரியாத
புண்ணிய பூமியைச்
சாம்பல் மேடாக்கி விட்டார்..என்றால்

சத்தியபூமி சரிந்துபோக வேண்டியதுதானா?

நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில்
பொல்லுக் கொடுக்கப் புறப்பட்டால் என்ன செய்வது?

நாட்டில் இருக்கும்போது
கூடியிருக்க முடியாதவர்கள்..
எரிந்த வீட்டில் கூடுகட்ட நிற்கிறார்கள்..

யோசப், ரவிராசன், சிவராம்...
குமார், நிமலராசன், லசந்தா..
போன்ற மரணங்களின்
கொலைகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்..?

பாசிசச் சிங்களவனும்..
பாசிசத் தமிழனும் அல்லவா..
இந்தப் பாடைகட்டும் பல்லக்குவாதிகள்..

பக்கத்தே இருந்தபடி எல்லாக்
கக்கத்தும் மரணங்கள்..

இந்தக் கொலைக்காடர்கள் யார்..
எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாதா?

சூரன் மாமரமாய் வந்தகதை மாதிரி
கூட்டமைப்பு என்ற பெயரில்
காட்டிக்கொடுப்பவன் செய்திபோடச் சொல்லுகிறான்..

இவர்கள் யாரென்று
யாருக்கும் தெரியாதா?..

பாசிச ஏட்டய்யாக்கள் யாழ்ப்பாணத்தில்
பத்திரிகை எரிக்கிறார்கள் பார்க்கவில்லையா..?

ஒருபக்கம் பத்திரிகை எரிப்பு..
மறுபக்கம் காரியாலயத்திற்கு
பாதுகாப்பு..

எரிப்பவனைக் கக்கத்தில் வைத்து..
நரிக்கவசம் போடுகிற..முட்டாள்கள்..
துப்பாக்கிக்குள்ளே நப்பாசை கொண்டுவிட்டால்
தப்பாக்கிகள் என்ன தெரியாமலா
போய்விடும்..

இராணுவ ஒட்டடையில் பட்டடை போட்டுவிட்டு
தேர்தல் கிராணம் கௌவுகிறது..

அட..
வெறிகாறன் எழுதிகிற வியாக்கியானங்கள்..

விற்பனைக்காக பிரபாகரன்..
விமானத்தில் களத்தைப் பார்த்தார் என்ற எழுதுகிறவன்..
வெறியில் வானொலி நடத்துகிறவன்..
சூசை மட்டக்களப்பில் நிற்கிறாரா? என்று
கேள்விக்குறிபோட்டு எழுதுகிறவன்.. என்றும் பல
கண்முன் கரிபோடும் வாலாயங்கள்..
புண்ணாய் பிடுங்கித் தள்ளுகின்றன..

இன்றைய காலத்தில்..

தேசியத் தலைவனால் நியமிக்கப்பட்டவர் என்ற
காரணத்திற்காக தன்னைப் பேசவைத்தவரும்..
அவரின் அழைப்பாளர்களும்..
இன்னும் அசையாத கட்டுக்கோப்போடு நிற்கும்
ஊனாத்தானா அமைப்புகளும்
ஒன்றாக வரவேண்டும்..

நிலம், தேசியம், தன்னாட்சி, சுயம் கொண்ட
ஒரு இனத்தின் வரலாறு இந்த
நாடுகளுக்குச் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும்..

ஒன்றுபட முடியாவிட்டால்
தின்று முடிக்கத் தினவெடுக்கின்றன துரோகங்கள்..

பத்மநாதன் எடுத்த முயற்சியில்
எல்லோரும் பங்குதாரராக வேண்டும்..

நினைத்தபாட்டுக்கு யாரும் எதையும் கதைக்காமல்
எல்லோரும் ஒன்றாக வருவோம்..

வெறிக்கூத்து ஆடுபவர்கள் சிங்களத்தின்
விசக்கூலிகள் ஆகிவிட்ட நேரமிது..

நிசத்தைத் தமிழன் வெல்ல..
உலகத்தில் ஒன்றாகி நிற்போம்...

-எல்லாளன்..
(நம்நாடு தளத்திற்காக..)

No comments:

Post a Comment