Sunday, June 14, 2009

பிரபாகரம்


பிரபாகரம்!

தேவனெ உதித்த தீரன்!
பிரபாக ரப்புதல்வன் பெட்புமிகக் கொண்டு
வரமாக வந்துதித்த மாறன்-குரலாகக்
கோவில் தரும்தெய்வம் கொற்றமிறை தாம்பாடும்
தேவன் எனவுதித்த தீரன்!

இவன்மொழி மண்ணின் வேதம்
சொல்லில் இவனுரைத்தால் தெய்வமிடும் வீரமொடு
வில்லில் இவனுரைத்தால் வெற்றியிடும்-கல்லிலே
மந்திரத்தில் மாங்காய் மயக்க முடியாதான்
இந்தயுக வார்ப்பே இவன்!

எட்டப்பர் பலர் கட்டபொம்மன் ஒருவனே!
பெண்டுபல் கண்டோர் பிடிமாது கண்டவர்கள்
கண்டவழி கண்டு கடித்தவர்கள்-உண்டுவர
எட்டப்பர் ஆனவர்கள் எல்லோரும் தீயர்எம்
கட்டபொம்மன் மட்டும் கடவுள்!

இவனும் தூயன்..இவன்படையும் தூயபடை
என்றுமிவன் தூயன் இவன்படையில் வந்தாராய்
அன்னமென நின்றோர் அறமாதர்-வென்றபுலி
வேங்கைப் படைவகுத்து வேதமாய் நற்றமிழை
தாங்கிநடந் தானிவனே தம்பி!அறம்வெல்லும் அறிவன்!

நம்புவான் நம்ப நரிவேலை செய்தாலே
தும்பிவான் போலே திரியானே-நம்பியவர்
கெட்டவராய் மாறிக் கிளர்ந்துபடை தந்தாலும்
வெட்டியறம் செய்வான் விரதன்!

போர்க்கைதி கண்ட பிரபாகரன்!
சிங்கப் படையவரைச் துட்போர் பிடித்தாலும்
எங்குமவர்க் கின்னல் இவன்வையான்-சிங்களத்துப்
போர்ப்படஞன் பத்திரமாய்ப் போன்பின்பு தானுவந்து
வார்த்தைகளால் நன்றிசொன்னான் வையம்!

மாதரை மதித்த மாமகான்!
மாதுக்கள் நாடான் மணிநிலத்து மக்களின்பால்
பாதுக்கை யானவனே பாரறியும்-சூதுவைத்துப்
போனவர்போல் போகான் பிரபாகம் ஒன்றாலே
ஆனதிவன் மண்ணின் அறம்!

வேரார் பரணி இவன்!
மூண்ட கனத்தாலே முற்றிலுமாய் இந்தியத்தின்
பேண்ட குணத்தாலே போரிழந்தோம்-யாண்டும்
பிரபாகரத் தோன்றல் பெருநிலத்து வேரார்
பரணிக் கிவன்தெய்வம் பார்!


கூன்நிமிர்த்த வந்த கோ!

பிறந்து வரும்பொழுதே பெய்நிலத்திற் கானான்
இறந்து குறிப்பெழுதான் என்றும்-குறைமனிதன்
தான்சாவான் பாரீர் தலமுறையும் எம்தலைவன்
கூன்நிமிர்த்த வந்திடுவான் கொள்!

பிரபாகரத்தாய்!
பேச்சு எலாம்நீதி பொன்விழியில் மண்சுவடு
மூச்சு எலாம்தூய மேவுமறம்-பூச்சாகிப்
போயகலான் நிற்பான் பிரபாகப் புத்தகமே
தாயகமாய் வந்துதிக்கும் தாய்!

-சோலைக்குயில்

No comments:

Post a Comment