Sunday, June 7, 2009

இந்தியா.


புலிவெண்பா..
வன்னி வரலாற்றுப்போர்
அத்தியாயம்-04
இந்தியா.


இந்தியா புண்ணிய பூமியா?
புண்ணிய பூமியென்றும் பொற்கீதை நாடென்றும்
எண்ணியதோர் பாரதமின் றிப்படியா?-குண்டெறிந்து
ஈழத் தமிழர் இறப்பில் மகிந்தனுக்கு
சூழக் கைகொடுத்தார் சொல்!

இரசீவ் கொன்றது ஏழாயிரம்
இலட்சம் கொன்றனள் சோனியா கூட்டு
இரசீவார் அன்றேழு ஆயிரத்தைக் கொன்று
சிரசறுத்து வந்தகதை சொன்;னோம்-அரக்கரென
இன்றுசிறீ லங்கா இரசாய னக்குண்டால்
கொன்றெரிக்க இந்தியமே கூட்டு!

இந்தியா உருவாக்கிய இட்லர் இராசபக்சா
இந்தநூற் றாண்டதினில் இட்லர்க்கும் மேலாக
மந்தெரித்தல் போலே மடியவைத்தான்-இந்தியமே
சொல்ல மகிந்தன் சுவடழித்து வன்னிமண்ணை
கெல்லி எறிந்தானே கேள்!

உலகை அண்டவிடாமல் இந்தியா..
இந்தியம்தான் எல்லாம் இரசீவான் பாணியிலே
சந்தி முழுவதிலும் சாக்காடு-உந்துலகம்
ஓடிவரக் கூட ஒருவரையும் அண்டாமல்
மூடி அழித்தாரே மூடர்!

மக்களைப் புதைகுழிக்கு அனுப்பிய இந்தியா
முப்பதி னாயிரமாய் மேல்மக்கள் சாவேற்க
முப்பதி னாயிரமாய் ஊனமுற-துப்பலாய்க்
குண்டு எறிந்துவிழக் குப்பையாய்த் தானீந்து
சண்டி புரிந்தாளே சோனி!

இந்தியா தன்வேலையைப்
பார்க்கவெனக் கூறும் பக்சர்கள்

ஒருவருமே இல்லாமல் ஊரழித்த பின்னால்
செருக்கோடு இந்தியத்தைச் சொல்லிக்-கருக்கோடு
கோத்தபாயா சொல்லும் குறிச்சொல்லில் இந்தியர்க்கு
வாத்தியார் வேலையென்றான் வார்!

சீனா கோர்த்த இந்தியக் கழுத்து முத்துமாலை
சீனாவான் பாகிஸ்தான் சேர்ந்த இலங்காவை
ஏனோதான் அறியாயோ இந்தியமே-மூனாவாய்
முத்து மணிமாலை முடிச்சிறுக்கும் சீனாதான்
குத்திவரப் பாரடிநீ கேடு!

அழப்பிகளே இன்று இராசபக்ச அணி
புலியை அழித்துவிட்டு பேயெல்லாம் கூழாய்
எலியார்க்கு மாலையிட்டார் இன்று-வலிமை
இழந்தானே பிள்ளையான் எங்கோ மறைந்துவிட்டான்
அழப்பிகளே இன்றோர் அணி!


இந்தியப்பழி ஈழமெழுதிய சரிதம்
இந்தியத்தாற் சூழ்ந்தவினை ஈழம் அழிந்துபட
வந்த பழியொன்றும் மாறாது-உந்துலகம்
எங்கும் தமிழர்க்கு இந்தியமே ஊறுசெய்யும்
சங்கறுத்து நிற்குதடா சாற்று!

பாருலகம் எல்லாம் பழியேற்றும் இந்தியா..

வேருலகம் எல்லாம் விதந்துயரும் தமிழர்களை
கூரெறிந்து செயலாற்றிக் கேடாற்றும்-பாருலகில்
இந்தியத்துக் கென்ன இருந்தமிழன் சாவின்மேல்
வந்துபழி யாற்றுதடா வார்!

அய்நாவில் இலங்காவைக் காப்பாற்றி இந்தியா..

போர்க்குற்றம் கொண்ட கொழும்பார் அரசின்மேல்
நூர்க்குற்றம் அய்நா நொடிக்குகையில்-பார்க்குத்தன்
வல்லளவும் சொல்லி மகிந்தரசைப் காப்பாற்றி
கொல்லெழியர்க் கிந்தியமே கோ!

இலட்சம் தமிழ்மக்கள் இறந்ததிற்கு
ஒருவார்த்தை சொல்லாத சோனியா!

இத்தனை மக்கள் இறந்தார்க் கொருவார்த்தை
சுத்தமாய் இல்லாத சோனியா-நத்துகிற
பேயிலங்கை நாடிப் பிடிகையில் சீனாதான்
காயிறுக்கக் காட்டுமடி காதல்!

பிரபாகரனைக் கொல்ல சோனியா-
கருணாநிதி போட்ட கூட்டு

மாநிலத்தில் மூக்கா மனதுபடை யாளுகையில்
பூநிறத்தில் மாற்றமெதும் போடாது-மானமகன்
எம்ஜீயார் போனபின்பு இ;ன்தமிழர் மாநிலத்தின்
செம்மையெலாம் போனதடா செப்பு!
-Solaikkuyil

No comments:

Post a Comment