Sunday, May 31, 2009

வன்னிப் போர்ப்படலம்



புலிவெண்பா!
வன்னிப் போர்ப்படலம்



இராட்சதன் வந்தான்!

புலிவெண்பாப் போர்ப்பரணி புத்தகமாய் யாக்கிச்
சிலைசெய்த தாற்போலும் செய்தேன்-மலைபோலே
நிற்கின்ற வேளை நிலமே குருதிவிழப்
பற்பிளந்து வந்தானே பக்சன்!

குழந்தைகளைக் கொன்று குவித்த இனவழிப்பு!

இராட்சதனாய்ப் பண்டை இசக்கதைகள் போலே
இராசபக்ச வந்தான்காண் இன்று-கசக்கூறாய்க்
குஞ்சும் குருமானும் கொன்று சவக்காடாய்ப்
பஞ்சுநிலம் தீயிட்டான் பார்!

மோடனுக்குத் தீகொடுத்த சோனியா!

இந்தியத்துச் சோனியா ஈழத் தமிழர்களை
முந்தி யழித்திடவே மோடன்கை-மந்திரமாய்க்
கந்தகத்தைக் காட்டிக் கடிவாள மிட்டாளே
சந்ததியே வெந்ததடா சாற்று!

மந்திக்கை மாலையென மாண்டார் தமிழர்
தீக்குளித்தான் முத்துகுமார் தேசமெங்கும் எம்முறவு
ஆக்குவித்த செந்தணலும் ஆராரே-நாக்குளித்த
இந்தியத்துச் சோரம் இருந்தமிழர் தாயகத்தை
மந்திப்பூ வாக்கியதே வார்!

ஆயிரமாயிராய் அழிந்த சிறுவர்!
ஆயிரமாய்க் குஞ்சு அழகுச் சிறுமழலைத்
தாயரொடு தந்தையும் தான்செத்தார்-பேயரக்கன்
நாலுதிசை யூடேயும் நாசகுண்டு வீசியதால்
சாலுழக்கு எல்லாமும் சா!

மரங்களிலெல்லாம் சதைச்சிதறல்
மண்கிடங்கு எல்லாமும் மக்கள் பதுங்குகுழிக்
கண்மருங்கல் எல்லாமும் கஞ்சலென-விண்சிதறி
வார்மரங்கள் கூடு வழிப்பாதை யாமெங்கும்
ஊர்சிதறக் குண்டெறிந்தார் ஊர்!

கழிவாகி நின்ற கருணாநிதி
கருணா நிதியாரும் காட்டாப்புக் காட்டி
முருக்காகி நின்றதுதான் மிச்சம்-பெருக்கோடிச்
சேர்ந்தொருகால் தில்லியிலே சேர்ந்தார் பதவிக்காய்
ஊர்ந்தார் எமக்கில்லை ஓர்!

இராசயனக் குண்டுகள் nகாடுத்த காந்தி குடும்பம்
விண்ணளந்த ஓலங்கள் வீடில்லை ஊனில்லை
தண்ணீர் பருக்கின்றிச் சாவெடில்கள்-கண்ணிழந்த
போதியாப் போலே பொழிய விசக்குண்டைக்
ஊதிக்கொ டுத்ததடா இந்தி!

பிரபாகரன் பெருமையைப் பிடிக்காத இருவர்
மத்தியிலே சோனியாள் மாநிலத்தே தீமூக்கா
செத்தீழம் போகவெனச் செய்தாரே-புத்துலகம்
போற்றும் பிரபாப் பெருந்தலைவன் கொன்றுவிட
ஏற்றிவர்கள் தான்நடந்தார் ஏர்

சோனியா குடும்பத்தைச் சூழ்ந்தபழி சாகாது
இந்த வரலாற்றை இந்தியமே தான்நடத்தி
சிந்துரத்த மாக்கியதே சொல்லாயோ?-அந்தகராய்க்
கொன்றொழித்த காதைக்குக் கூனியாய்ச் சோனியா
நின்றழித்தார் என்றபழி நீளும்!

-சோலைக்குயில்

1 comment:

  1. view and comment to this please.
    http://namnaadhu.blogspot.com

    ReplyDelete