Friday, July 24, 2009


முதலாவது ஆண்டு நினைவும் திதி வணங்கலும்!

தாயாகிப் பொன்மடியில்
தாங்கி வளர்த்தவளே!
தீயாக உருக்கித்
தெளிந்துபுடம் போட்டவளே
தூயவளாய் யாவருக்கும்
துதிக்கமனம் வைத்தவளே
ஏய ஒளிவடிவாய்
இறையடிக்குச் சென்றவளே
காய மனம்பரப்பிக்
கவலைகளில் மூழ்காமல்
நேய மணித்தாயை
நெஞ்சமெலாம் சுமந்தபடி
ஆயப் பொழுதுகண்டோம்
அகிலிறைவன் தாளிணையில்
சாயப் பொழுதுகண்ட
தாயே வணங்குகின்றோம்!

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சுற்றம்
06-08-2009

No comments:

Post a Comment