Monday, May 4, 2009

காலத்தின் வீச்சாய்



காலத்தின் வீச்சாய்
கனிந்தனை அம்மா வாழ்க!


வாழிய தலைவி அம்மா
வாழிய ஜெயல லிதா
வாழிய அறத்தின் கீற்றே
வாழிய குரலின் வீச்சே
வாழிய ஈழ மண்ணின்
வரமிடும் கால ஊற்றே
வாழிய வாழி என்றே
வாழ்த்துகின் றோமே வாழி!

நேற்றெலாம் எங்கே என்ன
நிகழ்விலே இருந்தால் என்ன?
காற்றிலுன் குரல்கள் மாறிக்
காலமே பகைத்தால் என்ன?
போற்றிடும் மாந்தர் பின்னாள்
போகநீர் கண்டால் என்ன?
நாற்றினை ஈழ மென்றே
நட்டதே போதும் அம்மா?

பொன்மனச் செம்மல் வாக்குப்
பொதிந்தவுன் குரலின் நோக்கு
சொன்னதைச் செய்யும் உந்தன்
சீரிய கொள்கை நாக்கு
மன்னிய உலக முற்றும்
வந்ததே தமிழன் மன்றில்
கன்னலாய் அமுதத் தேனாய்க்
கனிந்ததே வாழ்த்து கின்றோம்.!

அன்னைமண் சிதறு கின்ற
அலறுவாய் ஓலம் கேட்டும்
சின்னபிஞ் சிறுவர் வாலைச்
சேயிழைத் தாயர் தந்தை
பன்னமாய்ச் சதையின் துண்டாய்ப்
பகைவனால் அழிக்கும் போதில்
சன்னமாய் எழுந்த உந்தன்
சரித்திரக் குரலே கண்டோம்!

ஆயிரம் கதைகள் கோடி
அரும்கவி இயற்றி வண்ணப்
பாயிரம் பரணி பாடிப்
பார்ப்புலம் வரித்தால் என்ன?
தாயினைப் போலே வந்த
தங்கமே நிகரே இல்லாய்!
கோயிலாய்த் தமிழாய்க் குன்றாய்க்
கொற்றவம் சமைத்தாய் வாழ்க!

-புதியபாரதி

No comments:

Post a Comment