Friday, May 15, 2009

தமிழா எழுவாய்!


கொத்துகொத்தாய் விழுகிறதே என்னினமே
செத்துமடி கின்றதடா எம்நிலமே
யுத்தவெடில் இராசபக்சா கேட்கிலனே
மொத்தமென தமிழினத்தை அழித்தனனே!

ஊருலகம் சொல்லியென்ன சிதறுவாயன்
யாருரைத்தும் கேட்கவில்லை குதறுவாயன்
பேரலையாய் தமிழனெலாம் பூமிநின்றும்
நீரலையாய் ஒழிந்ததடா நீதியெல்லாம்!

இந்தியத்தாள் கொடுத்தகையே ஈழமண்ணின்
அந்தியத்தை எழுதுகிறாள் சோனியாத்தாள்
வெந்துமடி கின்றதடா தமிழினமே
எந்தைவழி அழிப்பதுவோ அந்நியனே!

உலகமெலாம் ஆர்ப்பரிக்கும் செந்தமிழா
உன்கையில் இருக்குதடா எம்நிலமே
புலமனைத்தும் ஓர்குடிலில் எழுந்திடுவோம்
இராசபக்சாப் போக்கிலியை விரட்டிடுவோம்!
-எல்லாளன்
படம் நன்றி:தமிழ்ஸ்கை

No comments:

Post a Comment