Friday, December 26, 2008

மாவீரனே.. மாவீரனே..

மாவீரனே.. மாவீரனே..

மாவீரனே மாவீரனே..
மாவீரனே.. மாவீரனே..
ஆவிதந்து ஈகம் செய்த
அன்னை மண்ணின் மறவனே! -மாவீரனே..

உன்னுயிரில் நீயெழுதி
உன்னினத்தை நீவழுதி
சென்றதுவுன் திருமுகமே
செங்களத்தின் புலிமகனே.. ஓ.. -மாவீரனே..

காலடி மண்ணைத் தேடுகிறேன்-என்
கடவுளாய் எண்ணிப் பூசுகிறேன்
போரடி வயலில் புதைகுழியில்-உந்தன்
பொன்னடி தொட்டுப் பேசுகிறேன்! -ஓ.. மாவீரனே

உன்னைப் பாடிடப் பாடல் இல்லை-உன்
உயிரைத் தொழுதிட மொழிகள் இல்லை
உன்னை எரித்திடத் தீயும் இல்லை-நீ
உறங்கும் சிதைவிடக் கோவில் இல்லை! -ஓ.. மாவீரனே..

-புதியபாரதி

No comments:

Post a Comment