Thursday, February 26, 2009

புத்தம் மகிந்தம் மரணம்..!

புத்தம் மகிந்தம் மரணம்..!


புத்தம் சரணம் அப்புகாமி
யுத்தம் மரணம் மகிந்தசாமி

கத்தும் சனங்கள் கணக்கு இல்லை
கருகி வெடிப்போர் உனக்கு இல்லை

நித்தம் சோறும் நிறைந்த வயிறும்
நினக்கு இருக்கு மகிந்தப்பா!
எத்தனை நாளைக்கு எங்களின் சனங்கள்
இரத்தம் இறைப்பார் கோத்தப்பா!

காந்தித் தாத்தா வாழ்ந்த தேசம்
கந்தகம் தந்தார் உனக்குஅடா
கடலின் மடியில் தமிழகம் எரிந்தும்
காணாத் தில்லி மணக்குதடா!

ஊரும் கருகுது உலகும் கதறுது
உனக்கும் சிறைநாள் இருக்கிறது
வேரும் விழுதாய் விளையும் தமிழனின்
விடியல் திருநாள் வருகிறது!
-நம்நாடன்

Monday, February 23, 2009

ஓ..கருணாநிதியே..!

ஓ..கருணாநிதியே..!

கருணா நிதியே கவிஞா கலைஞா
காலம் கொடுத்தது தீர்ப்பு-துரோகி
கருணா வுக்கும் கழிவென உனக்கும்
கணக்கது ஒன்றுதான் மதிப்பு!

பொன்மனச் செம்மல் தன்மனம் கொடுத்த
பூம்பொழில் அல்லவா ஈழம்-அந்த
இன்மனம் உனக்கு என்றுமிலை யப்பா
எங்கும்நீ சோரத்தின் கோலம்!

துண்டு துண்டாகச் சிதறிடும் பிஞ்சு
சோனியா அன்னையின் பரிசா?-அட
கண்டு கண்டுமே கந்தகம் அனுப்பக்
கருணா நிதிநீ உடன்பாடா?

ஆயிர மாயிரம் கோடிகள் வரித்த
அற்பமாய் அரசியல் ஆச்சு-உந்தன்
பாயிரம் எல்லமும் பற்றி எரிந்தவன்
பாடையில் துப்பலாய்ப் போச்சு!

ஈழம் எரிகையில் இந்திய வாந்திக்கு
இன்னுமா நீதரும் இருப்பு-அட
சூழ இருந்துநீ செலுத்தித் தமிழகம்
சொல்லுவ தெல்லமும் பழிப்பு!
-நம்நாடன்
(யாரும் எவரும் எங்கும் பதியலாம்-நம்நாடன்)

Saturday, February 21, 2009

குண்டில் எரிந்தது தேசம்!

குண்டில் எரிந்தது தேசம்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

காயும் சிதறுது கனியும் சிதறுது
காற்றும் சிதறுது காணாய்-அட
தாயும் சிதறுது தந்தை சிதறுது
தளிரும் சிதறுது பாராய்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!


குழியின் மத்தியில் குந்தி இருந்தவன்
குண்டு வெடியிலே இறந்தான்-வந்த
வழியின் தெருக்களில் வாழ்ந்த குடும்பமே
வகைதொகை இன்றி மடிந்தார்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

நல்லூர் தேரிலே நடந்த மக்களாய்
நாலா பக்கமும் ஊர்கள்-அந்தக்
கூட்டம் பார்த்துமே கொழும்பு ஏவிய
குண்டில் மடிந்தன வேர்கள்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

இந்தி(ய)ப் பேய்களும் இலங்கை நாய்களும்
எடுத்த நெருப்பிது அல்லவா? எங்கள்
சொந்தப் பிறப்புகள் செத்து மடிவதா
சிவந்த தேசமே சொல்லடா!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

-நம்நாடன்

Friday, February 20, 2009

வெடித்தெழடா!

ஆபத்தில் மீட்க வெடித்தெழடா!

எழுவாய் எழுவாய் எழுவாய் மண்ணில்
இடிக்கும் துயரம் பார்தோழா!
கழிவாய்ப் படைஞன் கற்பழிக் கின்ற
கனித்தமிழ்க் குலத்தைப் பார்தோழா!

கோத்தன் மதத்துக் கூறிய வார்த்தை
குலத்தமிழ் அழிக்கும் கொடுமையடா
பாத்திருந் தாலெங்கள் பண்தமிழ்ப் பூமி
பாடையில் உடலாய் எடுக்குமடா!

இந்து சமுத்திரம் எங்கும் தமிழனின்
இரத்தத்தால் நிரப்ப ஆணையிட்டான்!
இந்தக் கொடியவன் எங்களின் பெண்ணை
இராணுவம் பார்க்கட்டும் என்றுரைத்தான்!

எத்தனை நாள்வரை இனித்தமிழ்ப் பூமி
இருக்கும் எழியவர் கொடுமையடா!
சொத்து சுகமெலாம் இழந்தோம் ஆயினும்
சுதந்திரம் இழப்ப இருப்பதொடா!

பெற்றவள் அன்னை பெண்தமிழ் மங்கை
போற்றிய இனமே துடித்தெழடா!
அற்பப் பக்சர்கள் அழிக்கும் தமிழரை
ஆபத்தில் மீட்க வெடித்தெழடா!

இந்திரா வாலர்கள் எங்களின் பூமியை
இடுகா டாக்க இசைந்துவிட்டார்!
தந்திர மகிந்தன் தமிழரை அழிக்கத்
தங்களின் ஆயுதம் பிசைந்துவிட்டார்!

ஞாலத் தமிழா எழும்பு அதனால்
இந்த உலகம் அதிரட்டும்!
சூல வைரவன் சேர்த்த கரங்கள்
சுதந்திரம் வரைந்து முழங்கட்டும்!

-நம்நாடன் கவிதைகள்

Thursday, February 19, 2009

சோதனையும் வேதனையும்....

சோதனையும் வேதனையும்
சாதனைக்காகவே..!

இந்தநூல் உங்கள் கையில்
இடுகின்ற நேரம் மண்ணில்
சிந்திய குருதி கண்டேன்
சிங்களக் காடர் குண்டில்
கந்தலாய்ச் சடலம் கொட்டும்
காட்சியைக் கண்டேன், சிங்க
மந்திபோல் மகிந்தன் நின்று
மரணமாய் இறைத்தான் அம்மா!

நாளெலாம் குண்டு கொட்டி
நடுத்தெரு மக்கள் செத்து
சூளையாய் எரியக் கண்டு
செகமெலாம் கதறு தம்மா
ஊளைநாய் போல வாட்சி
இராசபக் சாக்கள் வந்து
கோளையாய்க் கொல்லு கின்ற
கொடும்கதை பெருகு தம்மா!

இளையவள் தமிழ்ப்பெண் ணாளை
இறைச்சியாய் ஆக்கிக் காமக்
குளத்திலே இட்டுக் கொன்று
குழிதோண்டிப் புதைக்கச் செய்து
அளைக்குகை அகதிக் கூண்டாய்
இராணுவ ஏவல் இட்டான்
முளையிலே கருப்பை தீய்க்க
முத்தமிழ் இனத்தைத் தீர்த்தான்!

இராணுவப் பூமி எங்கும்
இளைஞரைச் சுட்டான், மாற்றான்
புராணங்கள் பாடும் காக்கைப்
புல்லர்கள் அரசைச் சேர்ந்து
கிராணங்கள் போலச் சொந்தக்
கேள்நில இருட்டாய் வந்தார்
அராசகச் சேனை யாலே
அழிகுதே தமிழச் சாதி!

இந்திய நாடு கொண்ட
இழிவது தமிழன் சாக
தந்திரம் செய்த தாலே
தசையெலாம் சிதற மக்கள்
நொந்துமே கதறி வீழ்ந்தார்
சோனியா காந்தி அக்கா
கந்தகம் கொடுத்துச் சிங்கக்
காட்டருக் குதவி செய்தாள்!

அமைதியாம் படையாம் என்று
இந்திய ரசீவார் வந்தார்
மமதையாய் நிலத்துள் நின்று
மரணத்தை விதைத்தார், செத்துச்
சமைஞ்சது கற்புக் கூட்டம்
சகதியாய் இரத்தக் காட்டை
சுமையிட்டார் சென்றார், இன்றோ
சிங்களப் பேயாய் வந்தார்!

காலங்கள் மறக்கா தம்மா
கயவர்கள் நிலைக்க மாட்டார்
ஓலங்கள் நெடுநாள் இல்லை
ஓநாய்கள் மாய்வர், கொல்லச்
சாலங்கள் போடும் இந்தச்
சதிகாரர் வீழ்வர், சுற்றும்
ஞாலத்தில் தமிழன் நின்றே
நாடெலாம் எழுவான் காணீர்!

முத்துகுமார் எரிந்தான் ஈழ
முருகதாஸ் எரிந்தான் இன்னும்
சொத்தெனத் தமிழ மாந்தன்
செகமெலாம் எரிந்தான், இந்த
வித்தென நிற்கும் சாதி
வீழார்பார் நரியீர் கேளீர்
எத்தனை பேய்வந் தாலும்
எழுந்திடும் பீனிக்ஸ் சாதி!
-நம்நாடன்

Tuesday, February 17, 2009

வாலைப் பிடித்த சோனியா

மகிந்த -இந்திய இராணுவ தளபதிகளின் பேச்சை நம்பி
புலியின் வாலைப் பிடித்த சோனியா
செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009

இந்தியா உதவி செய்தால் புலிகளை எப்படியும் ஒழித்து விடுவோம் என்ற மகிந்தவின் பேச்சையும் இந்தியா இராணுவ தளபதிகளின் பேச்சையும் நம்பி புலியின் வாலை பிடித்திருக்கிறார் சோனியா. பிரபாகரனை நெருங்கி விட்டோம்இ இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றெல்லாம் சொல்லி பல மாதங்கள் ஒடி விட்டன.

ஆட்சி முடிவதற்குள் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளை அழித்து விட வேண்டுமென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு வேண்டிய உதவிகளையும் செய்கிறார். போர் முடிவுக்கு வராமல் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது? அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும்இ பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுப்பார்களா? இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா? ராகுல்இ பிரியங்காவை எப்படி பாதுகாப்பது? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் அவரை துளைத்தெடுக்கின்றன.

ராஜிவ் காந்தி செய்த தவறு அவருக்கு தெரியாமலா இருக்கும்? இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம். அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா? சமாதானம் செய்து வைக்காமல் ராஜிவ் காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார்.

அவர்கள் அங்கு 10,000 தமிழ்ர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து கற்பழித்து வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்று குவித்தார்கள். பெண்களும் குழ்ந்தைகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது ராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே? படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்கு படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்?

உண்ணாவிரதம் இருந்த‌ திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களவர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம்இ தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைதான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றி இருக்க‌லாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித் தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள்.

சீனாவும்இ அமெரிக்காவும் இலங்கையில் கால் பதிக்க கூடாது என்பதற்காக தமிழர்களை இந்திரா காந்தியும்இ ராஜிவ் காந்தியும்இ சோனியாவும் பலியிடுகிறார்கள். அறப்போராட்டம் செய்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்திரா ஒரு பக்கம் ஆயுத உதவி செய்தார். மறுபக்கம் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தார். இரட்டை நிலையை கடைப்பிடித்தார். பிறகு ராஜிவ் காந்தி எற்கனவே கொடுத்த ஆயுதத்தை புலிகளிடமிருந்து திரும்ப பிடுங்கினார். நோர்வே அரசு சமாதானம் செய்வது போல நடுநிலைமை வகிக்காமல் அமைதிப்படை என்ற பேரில் அட்டகாசப் படையை அனுப்பி வெறியாட்டம் ஆடினால் பாதிக்கப்பட்டவன் சும்மா விடுவானா? திரும்ப அடித்து விட்டான்?

சிங்களர்கள் மேற்கு வங்காளத்திலிருந்து இலங்கைக்கு சென்று குடியேறியவர்கள். அதனால்தான் என்னவோ வட இந்தியர்கள் சிங்களர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மீனவர்க‌ளை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லும்போது கூட தட்டிக் கேட்பதில்லை. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ஒரே ஒரு சரப்ஜித் சிங்கிற்காக மத்திய அரசு எத்தனை தடவை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தியது? அப்பாவி ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு நியாயப்படுத்தி பேசுகிறது.

நேரு குடும்பத்திற்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட இனத்தை பகைத்துக்கொள்வதே வேலையாகப் போய் விட்டது. இந்திரா காந்தி சீக்கிய இனத்தை பகைத்தார். மீண்டும் சோனியா ஒரு இனத்தை பகைக்க தொடங்கி விட்டார்? இதன் விளைவு என்னாகுமோ?. ராஜிவ் காந்தி செய்த தவறுக்கு சோனியாஇ ராகுல்இ பிரியங்கா ஆகியோர் பிராயசித்தம் தேடியிருக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து பழி வாங்க நினைக்கிறார்கள்.

ஒரு வேளை கடைசி ஈழப் போரில் புலித்தலைவர் கொல்லப்பட்டாலும்இ அவரது ஆபத்துதவிகள் மனித வெடிகுண்டுகளாக மாறி பாய்வார்கள். அடிபட்ட புலி சும்மா இருக்குமா? எதிரியை குறைவாக மதிப்பிட்டு பழி வாங்கும் உணர்ச்சியால் புலி வாலைப்பிடித்த சோனியா இனிவரும் காலங்களில் புலியின் வாய்க்குள் போகாமல் இருந்தால் சரி...
Tamilwin

Saturday, February 14, 2009

முருகதாசன் பேசுகிறேன்..

என்நெருப்பு
என்நிலத்தின் துடிப்பு!


எரியும் உடலில் விரியும் நெருப்பு
இனத்தின் துயரது தோழா!
புரியும் மொழியில் புகன்றும் தெரியார்
பூமியின் கொடியரே தோழா!

சிதறும் சனத்தை பதறும் மழலை
தெரியா திருக்குதே உலகம்!
கதறும் தமிழர் கருகித் துடிக்கக்
காணா திருக்குதே மனிதம்!

அயினா மருங்கில் எரிந்தேன் அதுதான்
அன்னைமண் எரிந்திடும் நெருப்பு
குயில்கள் பாடும் குலத்தெழில் மண்ணை
கொடியவன் கொன்றிடும் பதைப்பு!

அறிவாய் மனிதா அகிலப் பொறியாய்
அலறும் தமிழரைப் பாராய்!
நெறியாய் உலகே நீயிருந்தா யெனின்
நிசத்;தை உலுப்பியே வாராய்!

ஆண்ட பரம்பரை அழித்தவன் நீயடா
ஆதலால் உன்னகம் நானெரிந்தேன்!
நீண்டது எம்வதை நீதியே நீசொலாய்
நெடுந்தீ வளர்த்துமே நான்மலர்ந்தேன்!

எழுதியவர்: நம்நாடன்

Friday, February 13, 2009

காலங்கள் எழுதிடும் எல்லை

காலங்கள் எழுதிடும் எல்லை!

அய்யகோ அய்யகோ இத்தனை இத்தனை
அரக்கமா இலங்கவின் ஆட்சி?
ஆயிர மாயிரம் அன்னைமண் தமிழரை
அகதியாய் மாய்த்ததே சூழ்ச்சி
பொய்யுரை சொல்லியே பூமியை ஏய்த்தவர்
புழுதியாய்க் குண்டுகள் விதைத்தார்
பொடிபட நொருங்கிடப் பூவொடு பிஞ்சுமாய்
பொசுங்கிட வைத்துமே சிதைத்தார்
கையிலே குழந்தையும் கற்பிணி மாதராய்க்
கணவனோ டெரிந்தது நிலமே
கண்முனே சிதறிடக் கட்டொடு மக்களின்
கரையுடைத் தெழுந்ததே குருதி
செய்பயிர் நிலமதில் செத்துயிர் மடிந்திடச்
செய்தனர் சிங்களர் தேசம்
சிரசாகக் கொண்டதோர் தேசத்து மைந்தரே
திரளுவீர் இன்னுமா உறக்கம்!

அகதியாய் அடைத்தனன் அடைபட்ட சிறையிலே
அருந்தமிழ்ப் பெண்டிரைப் பறித்தான்
அவருயிர்க் கற்பினை அரக்கமாய்க் குதறினன்
அதன்பினே சடலமாய் முடித்தான்
சகதியாய் ஆனதே சஞ்சலம் மூளவே
சாக்குர லாகவே கொடுத்தான்
சரித்திட வைத்தவன் தமிழனின் சாதியைச்
சல்லடை யாக்கியே துளைத்தான்
குகைநரி யாகவே கொல்கிறான் தினம்தினம்
கொடுநிலம் ஆக்கியே வளைத்தான்
குடும்பமாய் அழிந்திடக் குழந்தைகள் பெற்றரைக்
கூவியே அழைத்திடத் துளைத்தான்
தகையிலான் ஆட்சியில் தருக்கமும் பேய்களும்
தாங்கிய நாடுதான் மிச்சம்
தாய்மடித் தமிழனே தாரணிப் புலமதில்
தனயனாய்ப் போக்கிவா அச்சம்!

இந்திய ஆட்சியின் இழிகுணம் தன்னிலே
இலங்கவும் கொன்றிடத் துணிந்தான்
இந்திரா காங்கிரஸ் என்றவர் சந்ததி
இன்றெமை அழித்திடப் பணித்தார்
இந்தியப் படைகளை இலங்கையை விட்டுநீ
ஏகுநீ என்றவர் தெரியார்
இரும்படி கொடுத்தனர் இரசீவார் பிடரியில்
என்றபின் னாயினும் உணரார்
மந்தியின் பாய்ச்சலாய் மன்மோகன் கூட்டமே
வாலாயம் போட்டுமே வந்தார்
மண்ணெலாம் எரித்திட வகுத்தனர் சிங்கள
வசைப்படை தன்னிலே புகுந்தார்
செந்தமி ழாயிரம் சிதறினர் ஆயினும்
சோனியாக் கூட்டமே மகிழ்ந்தார்
செகத்தினில் இந்தியச் செருகலால்; எம்மவர்
செத்தனர் செத்தனர் அறிவீர்!

கருணாநி தியென்றோர் களங்கமாய் நின்றவர்
கஞ்சலாய்த் தமிழகம் கண்டார்
காசுக்கும் பவிசுக்கும் கவிதையால் வரைந்தவர்
கனித்தமிழ் நாட்டினை முடித்தார்
குருவாகிச் செந்தமிழ்க் கூட்டத்திற் கில்லாமல்
கொடிகட்டித் தில்லிக்குப் பணிந்தார்
கொடுக்கையே இழுத்துப்பின் கூனியே சிங்களக்
கூற்றத்தின் மடியிலே விழுந்தார்
தருகின்ற உயிரெனத் தந்தவன் முத்துகுமார்
தாங்கிய சிந்தையைத் தெளியார்
தாய்மடி உணர்வினைத் தறித்துமே வரலாறு
தந்ததோர் சரித்திரம் எழுதார்
கருவாகி செந்தமிழ்க் காலத்தில் உருவாகாக்
கழிசல்கள் தமிழர்கள் இல்லை
கனியுயிர் ஈந்திடும் கண்மணிக் கீடெவர்
காலங்கள் எழுதிடும் எல்லை!

-நம்நாடன்

Sunday, February 8, 2009

கால்காசுக்கு உதவாத கருணாநிதி!

கால்காசுக்கு உதவாத கருணாநிதி!

விடுதலைக்குப் போராடுகின்ற ஒரு
இனத்தின் மொழி புனிதமானது..

அந்த இனத்தின் நாடு,பிரதேசம், பிரவாகம்,
அதன் பிரசவம் புனிதமானது..

அந்த மொழியின் பேனா நிரப்பியிருக்கும்
எழுத்தாணிகள் புனிதமானவை..

படைப்பாளிகள் புனிதமானவர்கள்..

தலைவர்கள், போராளிகள்..மக்கள்
புனிதமானவர்கள்..

போருக்கான பொருள், உண்டி, உடை,
கொடுத்தவர்கள் யாபேரும் புனிதமானவர்கள்..

எல்லோரும் புனிதமானவர்கள் என்றதினாலேதான்
யானும் புனிதமானவனாக..

ஆனாலும் கட்டபொம்மன் சரித்திரம்போல்
எல்லா சகாப்தமும் ஒரு எட்டப்பன் பிறக்கிறான்..

காக்கைக்குப்பின் கருணா என்ற
சரித்திரம் எழுதப்பட்டாயிற்று..

பொன்மனச்செம்மல் எம்ஜீயார் என
எல்லோரும் ஆகிவிட முடியுமா?

முக்குளித்தாலும் முத்தமிழில் எழுதினாலும்
கருணாநிதி என்ற காசுமனிதன்
இன்றுஒரு கால்வாசி மனிதனாக
நான் கணக்கிட்டுக் கொள்கின்றேன்..

ஆயிரம் கருணாநிதி அவதரித்தாலும்
ஒரு எம்ஜீயாரின் சுண்டுவிரல் ஆகிக்கொள்ள முடியாது..

ஈழத்தமிழனுக்குக் கிடைத்த ஒரு
வரலாற்றுப் பழி கருணாநிதி என்பது
இன்றைய-இதை எழுதுகின்ற
நாட்களின் பதிவுகள்..

இந்தியத்தின் காங்கிரசு ஆட்சியை
ஈழத்தின் தமிழர்களைக் கொன்ற,
சிங்களத்தின் மூலம் கொலையேவி நிற்கின்ற
சோனியா தலைமையிலான ஒரு
கேவலக் கூட்டமென இன்றைய
கோடுகளை நான்
சரித்திரமாக எழுதிவைக்க விரும்புகிறேன்..

சிங்கள ஆட்சியானது இன்றைய
மகிந்த தலைமையில் உருவாகிய
ஒரு மாமிச பிண்டம்..

இளம்வயதுத் பெண்களைக் கற்பழித்துக்
கொலைசெய்யக் கட்டளை பிறப்பித்திருக்கும்
ஒரு காட்டுமிராண்டிகள் கூட்டம்..

வெள்ளைக் கொடியுடன் இராணுவப் பகுதிக்குள் நுழைந்த
பல ஆயிரம் தமிழ்மக்கள் மீது,
வேவுவிமானம் மூலம், அவர்களைப் படம்பிடித்து,
அந்தப் படங்களின் நிலப்பகுதிகள் மீது
ஏவுகணை அடித்துக் கொன்ற செய்தி
இந்தப் பொழுதில் வந்திருக்கிறது..

இந்திரா காந்தியின் மார்புக் கவசம்
அணியாதவாறு ஏன்
சூடுபட்ட அன்று மட்டும் சென்றார்..?

யார்மேல் விசாரிக்க வேண்டுமோ? யாரை
விசாரிக்கச் சொன்னார்களோ அவருக்குப்
பதவி உயர்வு கொடுத்தார் ரசீவுகாந்தி!

ரசீவுகாந்தி இறந்தபோது எந்தக் காங்கிரசான்
உடன் இறந்தான்?

செயின் கமிசன் ஆணையைச்
சோனியா காந்தி பதிவிக்கு வந்தும்
எடுக்கவில்லையே ஏன்..?

அயினாவின் இரகசிய உறுப்பினர் சந்திப்பில்
மெக்சிக்கோ கொடுத்த சிறீலங்காவுக்கு எதிரான
புகாரை, இந்தியா ரசியாவைக்கொண்டு
வீட்டோ செய்திருப்பதானது என்ன?

தமிழனை இன்னும் கொல் என்று
சிங்களத்திற்குக் கொடுத்த
கட்டளை அல்லவா அது?

சிங்கள ஆட்சி தமிழின அழிப்பை
எடுத்திருக்கும் யுத்த இனம்..!

இந்தியா தமிழின அழிப்பு வருமென்று தெரிந்தும்
கச்சதீவைக் கொடுத்த கர்மவியாதி..

புலிகள் போய்விட்டார்கள் என
யாரும் நினைப்பதில் பயன்இல்லை..

அவர்கள் புனிதமானவர்கள்..

வட்டப் புள்ளியில் இருந்து
ஒரு உடைப்பு வரும்..

அந்த உடைப்பில்தான்
அக்கிரமக் காரர்களின் வீழ்ச்சி
கணக்கிடப்படும்..

தமிழீழத்தின் அரயணைத்
தாம்பாளம் அலங்கரிக்கப்படும்..

மானமுள்ள தமிழ் எழுத்தாளனே..
இந்தப் பதிவுகள் மரணிக்கப்படக் கூடாதவை.
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
இதை எடுத்துச் செல்..

-சுந்தரபாண்டியன்
தமிழ்நாடு.

Wednesday, February 4, 2009

எழுவோம்..

எழுவோம்.. !

எத்தனை கோடி இடியுடன் கூடி
எரியுடன் குண்டுகள் வீழ்ந்தும்
எட்டபப் பருக்கை தொட்டிடக் கொழும்பில்
இந்தியக் கூட்டுகள் மலிந்தும்
புத்தரின் காவி போட்டவர் நின்று
போரபோர் என்றுமே பொலிந்தும்
புல்லராம் மகிந்தர் பொய்யுருக் கொண்டு
புவியைம றித்திடப் போந்தும்
செத்தும லிந்து தெருவெலாம் எங்கள்
தேகமும் சதையெலாம் கிடந்தும்
தேசமெல் லாமும் தேர்ந்திடா வகையில்
தினமொரு கதைகளாய்த் தெளித்தும்
யுத்தம லத்தார் உருக்கொள வாலை
உயர்த்தியே உரைத்துமே வந்தார்
இத்தனை பிறகும் இருப்பமோ மகனே
இனியுநாம் பொறுக்கிலோம் எழுவாய்!

மனிதவு ரிமைகள் அய்நாவ மைப்பும்
வாலைசு ருட்டியே வருவார்
பொடிமலைத் தேனீர் பருகிய பின்னர்
போகுவர் எங்களைக் காணார்
புனிதபா ரதமே போரினை நகர்த்தும்
புல்லராய் மாறியே வருவார்
பேயுருக் கொண்டு பொய்யுரை பகர்ந்து
பேயராய் ஆகியே போவார்
இனியொரு வாழ்வோ எரிந்திட வீழ்வோ
என்றுத மிழ்ழகம் உரைத்தும்
இளைஞரின் உயிர்கள் எரிந்திடக் கண்டும்
இந்திய வடக்கினார் மாறார்
மனிதமும் நீதி வகுத்தவர் தமிழர்
மணிநிலப் போரதாய் எழுவோம்
வையகத் தேசம் வாழ்ந்திடும் எல்லோர்
வரைவிலும் ஈழமண் காப்போம்!

Sunday, February 1, 2009

ஒரு கனடிய இரவில்..

ஒரு கனடிய இரவில்..
எங்கள் இளைஞர்கள் கையில்..


(சீயெம்மார் வானொலியில்
உரைத்த கவிதை இது)

பொருக்கென வெடிக்கப் பொசுங்கிட வைக்கும்
பெருங்குளிர் இடித்திடும் போதில்
உருக்கிடா திருக்கும் உறைபனிக் காற்று
உடுக்கடித் திருக்குமாம் இரவில்
குருத்துகள் எங்கள் குலத்தமிழ் இளையீர்
கூட்டமாய் நிற்பதைப் பார்த்தேன்
ஒருத்தரும் இல்லை ஓரினம் இல்லை
உங்களுக் கிணையெவர் உண்டோ?

திக்கெலாம் கூடித் செந்தமிழ் உறவார்
திரண்டனர் இலட்சமாய் என்றால்
கக்கிடும் விறைப்பில் கனடியத் திரவில்
கையிலே பிரசுரம் கொடுத்தீர்
எக்களத் தாட்சி இந்தியம் வந்துமென்
எழுகரம் எம்மதே என்றீர்
இக்கரை இளைஞீர் இரும்தமிழ் உறவீர்
இறைபணி இவற்குமேல் இல்லை!

இரும்பென இருந்த ஊடகம் உடைத்தீர்
இந்தமண் பரப்பிலே இடித்தீர்
முருக்கிலே ஏறி இந்தியம் வந்த
மோகமண் இழப்பினை யுரைத்தீர்
பருக்கையில் மகிழும் பாவியர் இருக்கப்
பாசமண் பிள்ளையாய் ஆனீர்
கருப்பிறை சுமக்கும் கண்மணித் தமிழீர்
காலமெல் லாமெலாம் வாழ்வீர்!
-புதியபாரதி